Monday, June 21, 2010

சாரு நிவேதிதாவை ஏன் நிராகரிக்க வேண்டும்?

முதலில் இந்தமாதிரியான ஒரு பதிவை எழுத நேர்ந்தமைக்கு மிகவும் வருந்துகிறேன். பொதுவில் யாரையும் தூற்றி எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

மெல்லிய பகடி என்றால் நலமே.அதுவே கடுமையான தாக்குதலே தொழில் என்றால் அது அருவருக்கத்தக்கது.எழுதுவதற்கு ஒன்றும் தோன்றவில்லை என்றால் எழுதாமல் வெறுமனே இருந்துவிடுதல் உத்தமம்.அப்படியாகப் பட்ட தூற்றுதலையே தொழிலாகக் கொண்ட நபர்தான் சாரு நிவேதிதா. இவருடைய முழுமுதற் தொழில் ஜெயமோகனை நேரடியாகத் தூற்றுவது ,இல்லாவிடில் பினாமி பெயரில் மறைமுகமாகத் தூற்றுவது.

சில வாரங்களுக்கு முன் சாரு தன்னுடைய வலைத்தளத்தில் ஒரு இணைப்பை அளித்திருந்தார்.என்னவென்று பார்த்தால் அறிவுபுத்திரன் @ ஸ்டீபன் மாணிக்கம் என்னும் நபரின் ஜெயமோகத் தாக்குதல்கள்.(arivuputhiran.blogspot.com என்னும் தளம் தற்போது நீக்கப்பட்டுவிட்டது).

மேற்கூறிய நபர் தனிமனிதத் தாக்குதல்களாக அடுக்கியிருந்தார். அதாவது ஜெயமோகன் ஒரு மனநிலை சரியில்லாதவர்.அவரே இதை வெளிப்படையாக ஒத்துக்கொண்டிருக்கிறார் என்பதே.

ஜெயமோகன் சிறுவயதிலேயே தந்தையையும் தாயையும் இழந்து கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளான நிலையையே இவ்வாறு சாரு அல்லது அவரது பினாமி குறிப்பிடுகிறார்.நிஜவாழ்வில் இப்படிப்பட்ட சூழ்நிலையில் தடம் புரளும் எத்தனையோ பேர்களுக்கு மத்தியில் தன்னுடைய மன அழுத்தத்தின் மூலம் கொண்ட மன எழுச்சியை முறையாக இலக்கியத்தின்பால் திருப்பி உச்சம் அடைந்திருக்கும் ஜெயமோகன் மனநிலை சரியில்லாதவரா ? இல்லை அவரைத் தூற்றி யே புகழ் பெற நினைக்கும் சாரு போன்றவர்கள் மன நிலை சரியில்லாதவர்களா?

எனக்கு என்ன கோபம் என்றால் ஒரு வலைப்பதிவைத் தொடங்கி ஜெயமோகனைத் தாக்கி எழுதிவிட்டால் உடனே புகழ் பெறலாம் என்னும் வலைப்பதிவர்களின் குறுக்கு வழி யுக்தி குறித்ததே. நமக்கென ஒரு நடையை நாள்பட உருவாக்கிக்கொண்டால் தானாகப் புகழ் வரும் ,அன்றி எதிர்மறை அரசியல் புரிந்து புகழடைய நினைப்பது பேடித்தனம். நீ மட்டும் உத்தமனா இப்போது சாருவைத்தாக்கி எழுதுகிறாயே என்று கேள்வி எழலாம்.என்றாலும் குறுக்குவழியில் செல்ல நினைப்பவனின் யோக்கியத்தனத்தை யாராவது கூறியாகவேண்டுமே?

ஜெயமோகன் தன்னை ஒரு மனநோயாளி என்று ஒத்துக்கொண்டார் என்று கூறும் சாரு @ பினாமி நபர், சாரு தான் ஒரு " womanizer" என்று கூறிவிட்டு ஒரு குட்டிக்கரணம் அடித்து மறுத்தாரே இதை எந்தவிதத்தில் எடுத்துக் கொள்வது ?

ஜெயமோகன் மேல் வைக்கப்படும் மற்றுமொரு குற்றச்சாட்டு அவர் ஒரு இந்துத்வா ஆதரவாளர் என்பது. அவரது எழுத்துக்களைப் படிப்பவர்களுக்குத் தெரியும், அவர் கூற விரும்புவதன் சாராம்சம். எப்படி சாருவுக்கு தான் ஒரு " man of total contradictions" also "a womanizer" என்று கூற உரிமை இருக்கிறதோ அதேபோல் ஜெவுக்கும் தன் நிலைப்பாட்டைக் கூற விருப்பம் உள்ளது. இந்துமதம் என்பது ஒரு மதமே அல்ல, பண்டைய மக்களின் வாழ்க்கை நெறியின் தொகுப்பே இந்து மதமாக அறியப்படுகிறது என்ற உண்மை புரிந்திருந்தால் இந்துத்வா ஆதரவாளர் என்னும் கோஷம் வந்திருக்காது.

அப்படியெனில் சாரு நித்யானந்தாவை ஆதரித்தது , கண்மூடித்தனமாக புகழ் பாடியது எந்த விதத்தில் சேர்க்கலாம்? வாங்கிய காசுக்கு குரைத்துக் காட்டிய விசுவாசமோ?

ஜெயமோகனே பகடி என்னும்பெயரில் எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் கிண்டல் அடித்துள்ளார் என்று கேட்கலாம்.இதுபோன்ற மென்பகடியையே ஒத்துக் கொள்ள மறுக்கும் தமிழ்ச்சமூகம் மாறவேண்டியுள்ளது.நம்மில் எத்தனை பேர் எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் மிமிக்ரி செய்து பகடி செய்கிறோம்? எத்தனை ஜோக்குகள் உருவாக்கியிருக்கிறோம் ? கலக்கப் போவது யாரு அசத்தப் போவது யாரு என்று நிகழ்சிகளைத் தடை செய்ய நம்மால் முடியுமா? ஆனால் அடிச்சா திருப்பி அடிக்கமாட்டான் என்று உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே அடிக்கும் சட்டாம்பிள்ளைகளை எதைக் கொண்டு அடிக்கலாம்?

எந்த ஒரு எழுத்தாளனையும் வாசகர்கள் அந்தரங்க வாழ்க்கை கொண்டு எடைபோடுவதில்லை.மாறாக படைப்புகளின் ஆழம்தான் அவனின் அடையாளம்.அந்தவிதத்தில் ஜெயமோகன் சாருவைக் காட்டிலும் பல்லாயிரம் மடங்குகள் முன்னால் நிற்கிறார்.

கூர்ந்து கவனித்தால் சாருவின் மன ஆழத்திலிருக்கும் பொறாமைத்தீயே துவேஷ வார்த்தைகளாக வெளிவருகிறது.

எனக்கு மிக்க மகிழ்ச்சியளித்த ஒரு விஷயம்அறிவுபுத்திரன் வலைத்தளத்தில் பத்தில் ஒன்பது பேர் சாருவை நிராகாரித்து பின்னூட்டமிட்டுள்ளனர். வாசகர்கள் கொண்டாடும் எழுத்தாளர் நான் என்று கூறிக்கொள்ளும் சாருவிற்கு அந்தோ பரிதாபம் துணை வரக்கூட ஒரு பின்னூட்டமிடுபவர் இல்லை.மக்கள் அவரைப் பற்றி சரியாகப் புரிந்துள்ளனர் என்று எண்ணுகிறேன்.

மற்றபடி ஜெயமோகனின் படைப்புகளைக் குறித்து சாருவின் பினாமி குறை கூறியிருந்தார்.சரி அதைக்கூட பொறுத்துக் கொள்ளலாம் .ஆனால் சாரு படைப்பிலக்கியத்தில் எத்தகைய சாதனை படைத்துவிட்டார் என்று பார்த்தால் ஏமாற்றம்தான்.

வெறும் சுய பீற்றல்கள், தம்பட்டம், நானொரு நல்லவன் வல்லவன் நாலும் தெரிந்தவன், ஒரு இடிதாங்கி,சுமைதாங்கி, தண்ணி டாங்கி, வெண்ணை என்று ஒரே அனத்தல்கள். இல்லாவிட்டால் காசு கேட்டு பிச்சை எடுக்கிறார். உயர்தர ஹோட்டல் பாரில் போய் குடிப்பாராம், ஆனால் நாய்குட்டிக்கு உணவு வாங்க காசில்லையே என்று பிச்சை எடுப்பாராம்.

அதையும் மீறி என்ன எழுதுகிறார் என்று பார்த்தால் சும்மா பச்சை வார்த்தைகளுக்கு தாவிவிடுகிறார் , காயடித்து விட்டார்கள், கு.....டியடித்து விட்டார்கள் , நடிகையின் கு...டியை நானா நக்கினேன்..? என்று சாணித்தாள் பேப்பர் சரோஜாதேவி புக் எழுத்தாளர் அளவுக்கு இறங்கிவிடுகிறார். இதுவா ஒரு இலக்கியவாதியின் அழகு..?

கேட்டால் நானொரு கட்டுடைப்பவன் என்ற விளக்கம் வேறு.

ஜெயமோகன் வலைத்தளத்தில் வாசித்ததிலிருந்துதான் அவரது புத்தகங்களை வாங்கிப் படிக்கிறேன்.சாருவின் வலைத்தளத்தையும் வாசிக்கிறேன்.ஆனால் புத்தகங்கள் வாங்கும் எண்ணம் தோன்றவில்லை.ஒரு சோறு பதம்.

எனில் சாருவை ஒரு இலக்கிய உலகின் சுப்பிரமணியம்சாமியாகக் கருதி அவருடைய தூற்றல்களை நிராகரித்தோமானால் ஒருக்கால் இதில் கிடைக்கும் இன்பம் குறைந்து ஒருவேளை நல்ல படைப்புக்கள் அவரிடமிருந்து தோன்றலாம்.

(இலக்கிய உலகின் சுப்பிரமணியம்சாமி-இந்தச் சொலவடை குறித்து சாருவே தன்னுடைய வலைத்தளத்தில் ஒரு வரி குறிப்பிட்டிருந்தார்.என்றால் பட்டம் நன்றாக பொருந்துகிறது மனிதருக்கு .)

7 comments:

  1. ஜெயமோகன் வலைதளத்தில் வைரஸ் இருப்பதாக மென்பொருள்கள் சொல்லுகிந்றன. ஏதாவது வழி கிடைக்குமா,...

    ஜெகதீஸ்வரன்.
    http://sagotharan.wordpress.com

    ReplyDelete
  2. அன்புள்ள ஜெகதீஷ் , நானும் சில சமயங்களில் google reader மூலமே ஜெயமோகன் தளத்தை வாசிக்கிறேன். சில சமயங்களில் "fatal error" என்று வருகிறது.

    ReplyDelete
  3. ராஜேஷ்..
    இந்த பதிவைப் படித்ததும் மிகவும் மகிழ்ந்தேன்...
    இன்னொருத்தர் முகத்திரையைக் கிழிக்கும் உன் தைரியத்தை எண்ணி...

    ஒரு வேண்டுகோள்..தயவு செய்து உன் பதிவுகளை ஏதாவது திரட்டியில் (தமிலிஷ், தமிழ் மணம்) இணைத்து விடு.....

    ReplyDelete
  4. அன்புள்ள ராஜிக்கு,

    உங்கள் பதிவைப் படித்தேன் . நன்று, மிக நன்று. உங்கள் பதிவுகளில் இது ஒரு சிறந்த ஒன்று. எழுத்து உலகில் சிறகடித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் மத்தியில் , உங்கள் பதிவு பார்வைக்கு உரியது.

    நீங்கள் சாருவை பற்றி குறிப்பிட்டு இருந்தது, மிகவும் "சரி" என்றும் அல்லது "வகையாக பொருந்தும்" என எடுத்துக் கொள்ளலாம். அனால்

    1 ஒன்று, நீங்கள் மனதில் நினைத்து பார்க்க வேண்டும் , உங்கள் பதிவை சாருவே பார்க்க நேர்ந்தால் , என்ன மனநிலைக்கு தல்ல படுவார் என்று ஊகிக்க முடிகிறதா. வெறுமென புத்திமதியாக மட்டுமே எடுத்துக் கொள்ளமாட்டார் . ஏனெனில் உங்கள் பதிவு அவர் செய்த, செய்கின்ற "ஜெயமோகத் தாக்குதல்கள்" என்கின்ற தூற்றல் பற்றியே கூறுகின்றன, மாற்றாக சாருவை நீங்கள் , தமிழை வாழவைக்க, அல்லது மேம்படுத்த கேட்டுக்கொண்டால் அதுவே சாலச் சிறந்ததாகும்.

    2 . இரண்டு , இதுவே உங்கள் பதிவை ஜெயமோகன் அவர்களே பார்க்க நேர்ந்தால், நெகிழ்வார் என என்ன வேண்டாம், மாற்றாக கண்டு கொள்ளவே மாட்டார் என்பது என் கூற்று. அவர் பாடு அவருக்கு, சாருவின் பாடு உங்கைளைப் போன்ற தமிழ் விரும்பிகளுக்கு.

    வாழ்க தமிழ், வளர்க எழுத்து உலகம்!

    ReplyDelete
  5. அன்புள்ள மகேஷ், சாரு நிவேதிதாவுக்கு அறிவுரை கூறும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை, இப்பதிவு முழுக்க அவரின் செயல்பாடுகள் குறித்த எனது கோபம்தான். மற்றபடி இதை ஜெயமோகன் படித்தால் பாராட்டுவார் என்றோ சாரு படித்தால் திட்டுவார் என்றோ நினைக்கவில்லை. என் விருப்பம் இப்பதிவை குறிப்பாக சாருவின் அடிவருடிகள் படிக்கவேண்டும் என்பதே.

    ReplyDelete
  6. """மெல்லிய பகடி என்றால் நலமே.அதுவே கடுமையான தாக்குதலே தொழில் என்றால் அது அருவருக்கத்தக்கது.எழுதுவதற்கு ஒன்றும் தோன்றவில்லை என்றால் எழுதாமல் வெறுமனே இருந்துவிடுதல் உத்தமம்.""

    Wow...wow.. Jeymohan written பகடி on MGR and Sivaji.
    What we can call that /..Ppraanthan???

    edukan
    chennai

    ReplyDelete
  7. @ Anony: MGR , மற்றும் சிவாஜி குறித்து ஜெயமோகன் எழுதிய பகடி நீங்கள் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் .. எவ்வளவு சிரிப்பை வரவழைத்தது ? தனி மனித தாக்குதல் அல்லாத நாகரிக எல்லை மீறாத பதிவுகள் அவை.. உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் பாப்போம்.. ? நீங்கள் MGR குறித்து பள்ளியிலோ கல்லூரியிலோ காமடி செய்ததில்லை? குறிப்பாக அவரது உச்சரிப்பு குறித்து ? இன்னும் கூட MGR பாஷையில் " ஓட்டம்னா ஓட்டம் ஒரே ஓட்டம் " என்று பகடி பேசும் நண்பர்களுடன் சிரித்திருக்கிறேன். நீங்களும் அதையெல்லாம் செய்திருப்பீர்கள்.. ஜெயமோகன் எழுதுவது அப்படி ஒன்றும் இல்லையே.. அவரது அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார்.. அவர் என்ன சாரு மாதிரி " குப்பி கொடுத்தேன் .. குப்பி அடித்தேன் " நடிகை ......... யை நானா ....,கினேன் ? என்றா அநாகரீகமாக எழுதுகிறார் ?

    நிங்கள் தைரியமாயிட்டு ஜெயமோகனே மிடுக்கன் என்னு விளிக்காம்.. பிராந்தன் எந்நு விளிக்காம் பாடில்லா..

    ReplyDelete

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !