Friday, October 23, 2009

கந்தல் துணி - பாகம் 2

இந்த வார விகடன் இணைப்பில் (செண்டிமெண்ட் விகடன்) நான் கடந்த பதிவின் தொடர்ச்சியாக (கந்தல் துணி) எழுத நினைத்த ஒன்றைப் பற்றி ரீ.சிவக்குமாரும் எழுதியிருக்கிறார். அட பரவாயில்லையே நாம கூட விகடன்ல வர்ற ஒரு பத்தி அளவுக்கு யோசிச்சிருக்கொமே என்று வியப்படைய ஒன்றுமில்லை.இந்த நொந்து போன செண்டிமெண்ட்ஸ் பத்தி யாரு எழுதினாலும் ஒரே மாதிரிதான் இருக்கும்.

Thursday, October 1, 2009

கந்தல் துணி - பாகம் 1

தமிழ் சினிமா இன்றுவரையில் எண்ணற்ற cliche க்களை கொண்டுள்ளது.பலரும் பல பதிவுகளில் அடித்துத் துவைத்த கந்தல் துணிதான் என்றாலும் என் பங்குக்கு கொஞ்சம் நானும் துவைக்கிறேன். இல்லாவிட்டால் blogger இலக்கணம் மீறப்படுவிட்டதாகிவிடும். எனக்குத் தெரிந்த சிலவற்றைப் பட்டியலிடுகிறேன்.

1. க்ளைமாக்ஸ் ஐ நெருங்கும் சமயம், வில்லன் ஹீரோயினைத் துரத்திக் கொண்டிருப்பான். இருபது வயலின்கள் பின்னணியில் ஆர்ப்பரிக்க ஜீவமரணப் போராட்டத்தில் ஹீரோயின் ஓடிக்கொண்டிருப்பாள்.இருவரும் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு கட்டத்தில் ஹீரோயின் வில்லனின் பின்னால் தூணுக்குப் பின்பாக மறைந்திருப்பாள். வில்லன் அவளைக் காணாமல் தேடிக் கொண்டிருப்பான். ஒரு கட்டை ஹீரோயின் கண்ணில் படும், அந்தக் கட்டையை எடுத்து சத்தம் போடாமல், பதுங்கி வந்து வில்லன் மண்டையில் அடித்தால் தப்பித்து விடலாம்,