சில சமயம் நாம் பேசும் பொது வார்த்தைகளின் எழுத்துக்களை மாற்றி உச்சரித்து புதிய வார்த்தைகளை தவறுதலாக உருவாக்குவோம்.எல்லாருமே எதோ ஒரு சமயம் அப்படி tongue slip ஆகியிருப்போம். உதாரணம் ஓடிப் போனான் , போடி ஓனான். ஒரு அக்றிணை பிறவியை போடி வாடி என்று கூறுவது போல் ஆகிவிட்டது.கல்லூரி நாட்களில் நான் இவ்வாறு யோசித்திருக்கிறேன்.பெரும்பாலும் நாடாளுமன்றத்தில் உபயோக்கியமுடியாத வார்த்தைகள்.(Unparliamentary words ).
Friday, November 20, 2009
Wednesday, November 11, 2009
தமிழ் வகுப்பும் நகைச்சுவையும்..!
பள்ளிநாட்களில் நான் அதிகம் ரசித்தது தமிழ் வகுப்புகளே. மிக்க சுவாரஸ்யமானவை. காரணம் பாடங்கள் அல்ல. அவ்வகுப்புகளின்போது அரங்கேறும் நகைச்சுவை நிகழ்வுகள்தான்.குறிப்பாக 8 மற்றும் 9 ஆம் வகுப்புகளின் தமிழ்ப்பாடவேளைகளை என்னால் மறக்கவே முடியாது. முதலில் 8 ஆம் வகுப்பு பற்றி சொல்கிறேன். 9 ஆம் வகுப்பு பற்றி அப்புறம். 8 ஆம் வகுப்பில் கல்யாண சுந்தரம் சார்.மழித்த மீசை. நல்ல உயரம், அதற்கேற்றார் போல தேகம்.வேஷ்டி சட்டையில் ஒரு கச்சிதமான தமிழாசிரியருக்கான இலக்கணங்களுடன் வருவார்.கண்ணாடியை விட்டுவிட்டேன். எல்லா தமிழ் வாத்தியார்களைப் போலவே கண்ணாடியும் அணிந்திருப்பார். சுருங்கச் சொல்வதெனின் ஒரு நேர்மையான தமிழாசிரியர்.
சிலசமயங்களில் வேஷ்டியின் நுனியால் காதைக் குடைந்துகொண்டே அடுக்கு மொழியில் "அதனை எடுத்து... கொடுத்து... உடுத்து... " என்று பாடம் நடத்துவது அவ்வளவு ரம்யமாக இருக்கும்.ஆனால் பிரம்பைக் கையில் எடுத்தார் என்றால் தொலைந்தோம். ஒருமுறை ஸ்ரீராம் வாங்கிய அடியைப் பார்த்து நாங்களெல்லாம் கழிந்து விட்டோம்.
சிலசமயங்களில் வேஷ்டியின் நுனியால் காதைக் குடைந்துகொண்டே அடுக்கு மொழியில் "அதனை எடுத்து... கொடுத்து... உடுத்து... " என்று பாடம் நடத்துவது அவ்வளவு ரம்யமாக இருக்கும்.ஆனால் பிரம்பைக் கையில் எடுத்தார் என்றால் தொலைந்தோம். ஒருமுறை ஸ்ரீராம் வாங்கிய அடியைப் பார்த்து நாங்களெல்லாம் கழிந்து விட்டோம்.
Labels:
பள்ளி நாட்கள்
Subscribe to:
Posts (Atom)