Friday, July 17, 2009

திரைப்படங்களில் கதாநாயகி அறிமுகம் - ஒரு பார்வை ..!

தமிழ் சினிமாவில் hero worship தான் அதிகம். செம பில்டப்புகளோடு அந்தரத்தில் பறந்தபடியே வந்து கயிறு கட்டி டான்ஸ் ஆடும் காட்சிகள், இந்த இளம் தலைமுறை நடிகர்களிடையேயும் , நடுத்தர வயது கடந்த சரத் குமார் , விக்ரம் முதல் நஷ்டக்கணக்கு காட்ட படமெடுக்கும் தொழிலதிபர் கம் தயாரிப்பாளர் கம், டைரக்டர் கம், நடிகர்கள் J.K.ரித்தீஷ், S.Ve.சேகர் மகன் அஸ்வின் சேகர் வரை ஒரு தீராத மோகத்தையும் நமக்கு தலைவலியையும் கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் சில ரசிக்கும்படியான hero introduction பாடல்களும் உண்டு. கற்க கற்க -வேட்டையாடு விளையாடு. நச்சென்ற பாடல் மற்றும் காட்சிகள்.
இதுபோன்ற பாடல் காட்சிகள் super star தவிர யாருக்கும் பொருந்துவதில்லை என்பது என் எண்ணம்.
ஆச்சரியப்படும் விதமாக ஹீரோயின்களுக்கு இந்த விஷயத்தில் கொஞ்சமாவது வாய்ப்பும் கொடுக்கிறார்கள். She is a fantacy - காக்க காக்க ,சுற்றும் பூமி சுற்றும் - டும் டும் டும் , இப்படி கொஞ்சம் அடுக்கலாம், ஜோதிகா நிறைய ஆடியிருக்கிறார்.

இப்போது நாம் பார்க்கப்போகும் நடிகை 80 களில் மிக டீசென்ட் ஆக நடித்து பெரும் வரவேற்பை பெற்றவர். இப்போதும் அழகான அம்மா, ஆன்ட்டி நடிகை. நதியா. தன் பெயரில் hair style (நதியா கொண்டை என்று ஒன்று உண்டு) , புடவைகள் ,இன்ன பிற இதர பொருட்கள் என்று மிக famous ஆக இருந்தவர்.

பாடு நிலாவே பட ஷூட்டிங் சமயத்தில் நதியா எங்கள் வீட்டில் வைத்து மேக்கப் போட்டுக்கொண்டதாக அம்மா சொன்னார். எனக்கு அப்போது 2 அல்லது 3 வயது இருந்திருக்கும். ஒரு சீப்பைக் கூட அந்த மேக்கப் குழுவினர் விட்டுச்சென்று விட்டனர்.ரொம்ப வருடங்கள் அந்த சீப்பு "நதியா சீப்பு" என்ற பெயரில் எங்கள் வீட்டில் இருத்து. 1999 இல் வீடு மாறி சொந்தவீட்டுக்கு வரும்போது தூக்கி எறிந்துவிட்டோம்.

இவர் படங்களில் அறிமுகம் ஆகும் காட்சி மூன்றே விதங்களாகத்தான் இருக்கும். நதியா காலையில் எழுந்து jogging போவார். ரம்யமான பாதையில் செல்வார். ஒரு இயற்கை காட்சியை பார்ப்பார். நதியோரம் செல்வார். நீரில் துள்ளும் மீன்களைப் பார்ப்பார். சமயம் பார்த்து குயில் வேறு கூவித் தொலையும். அப்புறமென்ன பாட்டுதான். பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க ..

சரி இரண்டாவது வகையைப் பார்ப்போம். நதியா காரில் ஒரு மலைப்பாதையில் செல்வார். சமவெளியில் ஓட்டவே மாட்டார். மலைப்பாதை ஓரம் கண்டிப்பாக முன்னர் பார்த்த நதி ஓடியே தீரும். இப்படியே அழகை ரசித்தவாறே போகும் வண்டி திடீரென்று நின்றுவிடும். காரணம்..? பெட்ரோலோ ப்ரேக்கோ இன்ஜினோ இல்லை நண்பர்களே..!
radiator இல் தண்ணீர் காலியாகி நின்று விடும். அப்புறம் நதியா தண்ணீர் கேன் ஐ எடுத்துக்கொண்டு நீர் பிடிக்க அந்த நதிக்கு வருவார், அதே ரம்யமான சூழ்நிலை, மீன்கள்,தெளிவான நீர், தப்பாது வரும் குயிலோசை.. பாட்டு ரிபீட்டு....

இப்போது மூன்றாவது வகை .. a combination of either one of the above said situations along with the hero . Jogging செய்து கொண்டோ, அல்லது தண்ணீர் பிடிக்கவோ நதியா வருவாரா.. அப்போது இந்தமுறை குயிலின் பாட்டுக்கு பதில் ஹீரோ பாடுவார். "மலையோரம் வீசும் காற்று..!" இந்த பாடலில் மயங்கி ஹீரோவுக்கு தெரியாமல் நதியா பின்தொடர்ந்து செல்வார்.அப்பிடியே sympathy creat ஆகி லவ்ஸ் டெவலப் ஆயிடும்.இதைத்தான் அந்த அம்மிணி காலம்காலமாக செய்து கொண்டிருந்தார்.
இவ்வாறு ஹீரோக்களைப் போலவே நதியா தனக்கென ஒரு பாணியை அமைத்துக்கொண்டது மிகுந்த ஆச்சரியமான விஷயம்தானே? 






1 comment:

  1. great job..good rajesh..finally we are seeing a result for you have already spent lot of time.

    ReplyDelete

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !