Thursday, July 16, 2009

நாயைக் கடிக்கும் பூனைக்குட்டிகள்...!

இது பாண்டிச்சேரி நேரு வீதியின் அருகிலுள்ள ஒரு வீதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் . கொழுக்மொழுக்கென்று அழகழகான நாய்க்குட்டிகள் பால் குடித்துக்கொண்டிருந்தன. பாரதி பாடியதைப்போல் சாந்து நிறமொன்று, சாம்பல் நிறமொன்று,பாலின் நிறமொன்று , பாம்பின் நிறமொன்று என வகைக்கொன்றாக குட்டிகள். Bachelor வாழ்கையில் வளர்க்க முடியாது என்பதால் அந்த கருப்பு நிற குட்டியை மனமின்றி அங்கேயே விட்டு வந்து விட்டேன் .

சரி இந்த புகைப்படத்தைப் பார்த்தால் நமக்கு முதலில் என்ன தோன்றும் ?
தாய்ப் பாசம்...? ஒரு நாய்க்குட்டியை எடுத்துப் போக தோன்றும் ..! அதிக பட்சம் அந்த தாய்க்கு பிஸ்கட் வாங்கிப் போட தோன்றலாம்..!

போன வாரம் நான் சொந்த ஊருக்குப் போயிருந்தபோது என் பக்கத்து வீடு குட்டி பையன் ஹரிஷிடம் காண்பித்து இது என்ன என்று கேட்டேன். அவன் அதை சற்று நேரம் பார்த்து விட்டு சொன்ன பதில் மிக விநோதமானது. பூனைக் குட்டிகளெல்லாம் சேர்ந்து ஒரு நாயைக் கடிக்கின்றனவாம்.
பொதுவாக என் வீட்டைச் சுற்றி பூனைகள் அதிகம். என் அம்மாவிடம் நட்பு பாராட்டியும் என் தம்பியிடம் பயப்படுவது போன்று நடித்தும் , நான் எப்போதாவது வீட்டுக்கு போனால் " யார்ரா இவன் புதுசா இருக்கான் ..?" என்று வினோதமாக ஒரு look விட்டு விட்டு தன் வேலையைத் தொடர்வதுவுமாக ஒரு 10 பூனைகள் வீட்டைச் சுற்றி வளைய வந்துகொண்டிருக்கும்.


நாய்கள் எங்கள் வீட்டருகில் ரொம்பவும் குறைவே. குறிப்பாக குட்டி நாய்கள்.. மாற்றாக பூனைகளோ வருடா வருடம் மும்மடங்காகப் பெருகி வாழ்வன. சுனாமி வந்த சமயத்தில் மீன் கிடைக்காமல் நாங்கள் சைவ சாப்பாடு சாப்பிட்டபோது பூனைகள் மீன் இன்றி மிகவும் இளைத்து காணப்பட்டன. அப்போது நிறைய பூனைகள் புலம் பெயர்ந்து விட்டன. இருந்தாலும்ஒரு குட்டி பிறந்து நான்கைந்து மாதங்களில் அதுவும் குட்டி போட்டுவிடுகிறது.இதன் காரணமாக பூனைகளையே அதிகம் பார்த்து வளர்ந்த ஹரிஷ் சொன்ன பதிலைப் பார்த்தீர்களா.?

0 comments:

Post a Comment

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !