Tuesday, July 13, 2010

ராஜா ரஹ்மான் சில பகிர்வுகள் - தொடர்ச்சி

இந்தப் பதிவு கடந்த பதிவில் நான் ராஜா ரஹ்மான் பற்றி எழுதியிருந்த என் தனிப்பட்ட கருத்துக்களுக்கு எதிவினையாற்றிய புருனோவின் கேள்விகளுக்கு என் பதில்.

முந்தைய பதிவின் எனது கருத்துக்களை இள நீலநிறத்தில் "Highlight" செய்தும் ,
டாக்டர் புருனோவின் எதிர்வினைகளை நீல நிறத்திலும்,
அதற்கான எனது பதில்களை வழக்கமான கறுப்பு நிறத்திலும் எழுதியுள்ளேன்.

புருனோ அவர்களின் நெடிய வினாக்களுக்கு என்னால் முடிந்தவரை பதிலளிக்க விரும்புகிறேன்.

//கொஞ்சம் ரஹ்மானின் பக்கம் வருவோம்.ரஹ்மானின் பெரிய பலம் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி./
அந்த வளர்ச்சி அனைவருக்கும் பொது தான். மற்றவர்கள் அதை பயன்படுத்த வில்லை என்பதற்கு ரகுமான் எப்படி பொறுப்பு.

இப்படி தான் எழுத்தாளர் சுஜாதாவை பிடிக்காத கும்பல் ஒன்று கூறிக்கொண்டு அலைந்தது

"தொழில் நுட்பத்தின் வளர்ச்சி காலம் சார்ந்தது என்பதே உண்மை.இளையராஜா உச்சத்திலிருக்கும் போது கணிப்பொறி இந்தியாவில் ஆராய்ச்சி நிலையங்களில் மட்டுமே இருந்த விஷயம். தொழில்நுட்பம் இல்லாததற்கு இளையராஜா எப்படி பொறுப்பேற்க முடியும்? அவர் ஒன்றும் விஞ்ஞானி அல்லவே.வெறும் இசைஞானி தானே?
பிற்காலத்தில் கணிப்பொறி தொழில்நுட்பம் பெரிதும் வளர்ந்த காலங்களிலும் இளையராஜா தன் பங்கினை சிறப்பாகவே செய்திருக்கிறார். காதலுக்கு மரியாதை, டைம், ஏன் தேவதை என்று நாசரின் ஒரு மொக்கை படத்திற்கு கூட பாரபட்சமின்றி வழங்கியிருக்கிறார். "ஒருநாள் அந்த ஒருநாள் " பாடலின் இசை மிகபிரம்மாண்டமானது.
தற்போது தனம், வால்மீகி என்று அவரே மொக்கையாக சிலவற்றை அளித்திருப்பது எனக்கும் வருத்தம் தந்த விஷயம்தான்".

1992ல் சின்ன சின்ன ஆசை முதல் 2010ல் உசிரே போகுதே வரை ஒரு படத்தில் பாதி பாடல்களில் வார்த்தைகள் மிக மிக தெளிவாகவே உள்ளன

நேற்று இல்லாத மாற்றம்

என் வீட்டு தோட்டத்தில்

புத்தம் புது பூமி வேண்டும்

என்று உதாரணம் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஏன் தற்சமயம் பக்கத்து அறையில் ஒலிப்பது கூட ரஹ்மான் பாடல் தான்.

கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை.

எனக்கு வார்த்தைகள் தெளிவாகவே கேட்கின்றன

நீங்கள் காது மருத்துவரை அணுகவும்.

காதில் பிரச்சனை இல்லை என்றால் எந்த மருத்துவரை பார்க்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.

"அட புருனோ சார் நீங்களே ஒத்துக் கொண்டீர்களே.பாதி பாடல்களில் வார்த்தைகள் மிக மிக தெளிவாக உள்ளன என்று.எனில் மீதி பாடல்கள் தெளிவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறதுதானே?
இருப்பினும் நான் உதித் நாராயணனையும் சாதனா சர்கமையும் மிகவும் விரும்புகிறேன்.
உங்கள் கருத்தும் என் கருத்தும் ஒன்றுதான், ரஹ்மானின் ஆரம்ப கட்டப் பாடல்கள் உன்னத தரம்.எந்த சந்தேகமும் இல்லை.என்னுடைய மொபைலிலும் கணிப்பொறியிலும் ரஹ்மான் ஆரம்ப காலப் பாடல்கள் நிறைய உள்ளன.
எனக்கு காது தெளிவாகத்தான் கேட்கிறது.வேறு எந்த மருத்துவரையும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.தேவைப்பட்டால் உங்களிடமே வருகிறேன்."

//மற்றும் அவர் நம் மண்ணுக்கென உரிய விஷயங்களை குறைவாகவே இசைப் படுத்தியிருக்கிறார்.//

ஓ இளையராஜா மேற்கத்திய இசையை பயன்படுத்தவேயில்லையா.

குறை கூற வேண்டும் என்பதற்காக அபத்தங்களை அடுக்க வேண்டாம்.

"ராஜா மேற்கத்திய இசையைப் பயன்படுத்தவே இல்லை என்று நான் எந்தவகையிலும் கூறவே இல்லையே ? என் ஞாபகம் சரியென்றால் 1984 இல் வெளிவந்த (அப்போது நான் பிறக்கவே இல்லை ) எனக்குள் ஒருவன் திரைப்படத்தில் "எங்கே எந்தன் காதலி " "மேகம் கொட்டட்டும்"பாடல்களில் அவர் வழங்காத மேற்கத்திய இசையையா ரஹ்மான் உட்பட இன்றைய இசையமைப்பாளர்கள் வழங்குகிறார்கள்? கொஞ்சம் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் கூறுங்கள் பார்ப்போம்?"

/கண்டிப்பாக மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது.படம் வெளியான சில வாரங்கள் மாதங்கள் அவற்றை ரசிக்க முடிகிறது.அப்புறம் எப்பொழுதாவதுதான் திரும்பவும் கேட்கத்தோன்றுகிறது. இது முழுக்க முழுக்க என் எண்ணமே.//

இது அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் பொருந்தும் .ஒரு படத்தில் மெலடி பாடல்கள் மட்டுமே தான் காலம் கடந்தும் நிற்கும்.

வெற்றிவிழாவில் அனைத்து பாடல்களும் நல்ல பாடல்கள்தான்.ஆனால் இன்றும் சட்டென்று நினைவிற்கு வருவது பூங்காற்று என் பேர் சொல்ல தான்.

"அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் அப்படியே பொருந்திவிடாது. ஜெமினியில் "ஓ போடு" திருடா திருடியில் "மன்மதராசா" மிகச்சிறந்த துள்ளிசைப் பாடல்கள் என்பதில் ஐயமில்லை.எனினும் தற்போது அவற்றை கேட்க சற்று ஆயாசமாக உள்ளது. உங்களுக்கு ஒருவேளை அப்படி இல்லாமலிருக்கலாம்."

//இப்போது ஒரு விஷயத்தை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.ரஹ்மான் ஆண்டுக்கு 2 அல்லது 3 படங்களே இசையமைப்பார்.ராஜாவோ 80 களில் தொடங்கி 90 களின் பாதிவரையில் ஆண்டுக்கு 20 படங்களுக்கு குறையாமல் இசையமைத்திருக்கிறார்.//

ரகுமானின் இசையில் வரும் சின்ன சின்ன விஷயங்களை கவனித்தால் அதற்கு (பாடல் பதிவிற்கு) தேவைப்படும் உழைப்பு என்பது இளையராஜாவின் பாடல் பதிவிற்கு தேவைப்படும் உழைப்பை விட அதிகம் என்று புரிந்து கொள்ளலாம்.

"ஒரு சிறிய கணக்கு உங்கள் கவனத்திற்கு. நடிகர் மோகன் 1981 muthal 1988 அல்லது 1989 வரை 25 வெள்ளிவிழாப்படங்களில் நடித்திருக்கிறார். சராசரியாக ஒரு வருடத்திற்கு மூன்று வெள்ளிவிழப்படங்கள்.வருடம் முழுவதும் அவரது திரைப்படங்கள் திரையரங்களில் ஓடிக்கொண்டே இருந்திருக்க வேண்டும்.படங்களின் கதையும்,பாடல்களும் மட்டுமே இதனைச்சாதிக்க உதவின.சில படங்கள் பாடல்களுக்காக மட்டுமே ஓடின.பட்டியலிட்டால் இன்னும் நீளும். எல்லாப் பாடல்களும் இன்றளவும் மோகன் ஹிட்ஸ் என்றே ரசிகர்களால் விரும்பப்படுவன. காரணம் ராஜா.
ரஹ்மானும் இது போல பாடல்களுக்காக படங்களை ஓட வைத்திருந்தாலும் தொடர்ச்சியாக ராஜா போல வழங்கியதில்லை.
சங்கமம்,பவித்ரா,மேமாதம், விக்ரமனின் புதிய மன்னர்கள், என்று சிலவற்றைக் கூறலாம்."

அடுத்த விஷயம் : ரகுமான் உலகம் முழுவதும் செல்ல வேண்டியுள்ளது :) :) :) :)

"ராஜாவின் காலத்தில் இந்தியாவில் மற்றும் உலக அளவில் நிலவியப் பொருளாதார சூழலும், தொழில்நுட்பம் இணைய தளம் போன்ற வளர்ச்சிகள் இல்லாததாலும் ,ராஜாவுக்கு உலக அளவில் தன்னுடைய இசையை "Marketing" செய்யும் தேவை இல்லாமல் போனது.இந்திய சினிமா குறிப்பாக ஹிந்தி சினிமா வளர்ச்சியடையத் தொடங்கிய போதுதான் மணிரத்னம் போன்றோரால் ரஹ்மானின் இசை ஐரோப்பிய கண்டத்தை ஆக்கிரமித்து அதன் மூலமாக வந்ததே ஹாலிவுட் பட வாய்ப்புகள்.மேலும் "Concert" கள்."

//ஒவ்வொரு படத்திலும் குறைந்தது 3 பாடல்களாவது பெரும் வரவேற்பைப் பெற்ற வெற்றிப் பாடல்கள்.//

இது அனைத்து ராஜா படங்களுக்கும் பொருந்தாது என்பது உங்களுக்கு தெரியாது.

"கண்டிப்பாக ஒத்துக் கொள்கிறேன்.வருடத்திற்கு 20 படங்கள் இசையமைக்கும் போது 25 சதவிகித படங்கள் சோபிக்கவில்லை என்பது பெரிய விஷயமில்லைதான்.ஆனால் வருடத்திற்கு 3 படங்கள் தரும்போது எல்லாமும் சிறப்பாக இருக்கவேண்டும் என்று ஒரு ரஹ்மானின் ரசிகனாக எதிர்பார்ப்பதில் என்ன தவறு?"

//இல்லாவிடில் எல்லாப் பாடல்களும் மிகப்பெரும் வெற்றி பெற்றவை.//

இது அனைத்து ராஜா படங்களுக்கும் பொருந்தாது என்பது உங்களுக்கு தெரியாது.

"என்னால் சில பட்டியல்கள் தர முடியும் காதல் ஓவியம்,சிந்து பைரவி,அக்னி நட்சத்திரம் ,மௌனராகம்,இன்னும் மோகன் படங்கள் என அனுமார் வால் மாதிரி நீளும்."

//இன்றைக்கு தொலைக்காட்சி நிகழ்சிகளில் எல்லா பாடல் போட்டிகளிலும் ராஜாவின் பாடல்களே அதிகம் பாடப் படுகிறது.//

ஹி ஹி ஹி நீங்கள் போட்டி எல்லாம் பார்ப்பதில்லையா சார்
"ராஜாவின் பாடல்கள் மட்டுமே பாடப் படுகிறது என்று கூறவில்லை.அதிகமாக அவரது பாடல்களே பாடப் படுகிறது என்றே கூறினேன்.உண்மை என்ன என்று தமிழக மக்களைக் கேட்டு தெரிந்து கொள்ளவும்."

//ரஹ்மான் ஆஸ்கார் விருது பெற்றது தேர்ந்த விளம்பர வியாபர யுக்திகளினால் அந்த திரைப்படம் உலக அரங்கில் வைக்கப்பட்டதன் மூலமாகத்தான்.//

சீச்சி இந்த பழம் புளிக்கும் என்ற நரி நினைவிற்கு வருகிறது

ராஜாவை இசையமைக்க ஒரு ஹாலிவுட் இயக்குனரும் கூப்பிட வில்லை சார்.ஹாலிவுட் படத்திற்கு இசையமைத்தால் தான் ஆஸ்கர் கிடைக்கும்.

அதை புரிந்து கொள்ளுங்கள்.

"மேற்கத்திய இசையை மறுஆக்கம் செய்ததினால்தான் ரஹ்மானுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்கிறேன் நான் நீங்கள் மறுக்கிறீர்களா புருனோ சார்? நான்கூறிய வரிகளில் உண்மை இல்லை என்று உங்களால் திட்டவட்டமாக மறுக்க முடியுமா?ஆஸ்காருக்கு ரஹ்மான் உரியவரே.ஆனால் அதை வைத்து இளையராஜா திறமையற்றவர் எனும் ரீதியில் பேசும் நண்பர்களுக்காகவே இவ்வரியை நான் எழுதினேன்.ரஹ்மானின் எழுச்சியின் போது ராஜா கிட்டத்தட்ட ஒய்வு பெற்றுவிட்டார். அவர் போட்டிக்கே இல்லை. அதற்காக ராஜாவைத் தாழ்த்துவது எவ்விதத்தில் நியாயம்?

//ஜெய்ஹோ பாடலைவிட அவருடைய மற்ற எத்தனையோ துள்ளிசைப் பாடல்கள் தமிழிலும் ஹிந்தியிலும் எவ்வளவு சிறப்பாக உள்ளன என்று எண்ணிப் பார்க்கவேண்டும்.//

"ஆமாம் சார் ஆஸ்கர் என்பது தமிழ் படத்திற்கு அளிக்கப்படும் விருது கிடையாது.

உண்மை அது ஒரு ஹிந்தி - ஆங்கிலத் திரைப்படம்.பிரிட்டிஷ் இயக்குனரால் இயக்கப் பட்டது.என் வருத்தம் ஜெய்ஹோ பாடலை இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாம் என்பதே. மாறாக ரஹ்மானுக்கு கிடைத்துவிட்டதே என்னும் பொறாமை அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்."

/இளையராஜா உலக இசையின் சாற்றினை இந்திய இசையில் கலந்தார்.ரஹ்மானோ உலக இசையை (மேற்கத்திய இசையை) மறு ஆக்கம் செய்கிறார்.//

ரகுமானோ இந்திய இசையை உலகிற்கு அளிக்கிறார்

"இந்திய இசையான இந்துஸ்தானியா? கருந்தமிழ்நாட்டிசையான கர்நாடக இசையையா அவர் உலகுக்கு அளித்தார்? அவர் வழங்குவது கலவை "Fusion" எனலாம்.ராஜாவும் இதைதான் செய்தார்.ஆனாலும் நம் பாரம்பரியமான இசை சிதையாமல் செய்தார்."

// "Originality" என்பது ராஜவிடமே அதிகமாக இருக்கிறது.//

ஆதாரம் ப்ளீஸ்

"இது கொஞ்சம் பதில் கூற கடினமான கேள்விதான்.என்னைவிட ராஜாவின் "Cult Followers" உதவி செய்தால் வரவேற்கிறேன்."

/நாம் விரும்புவது நம் மண்ணின் இசை அதன் பாரம்பரியம் கெடாமல் நம்மை மகிழ்விக்க வேண்டும் என்பதே.இளையராஜா அதைத் தொடங்கி செவ்வனே செய்து நம்மை மகிழ்வித்து ஓய்விலுள்ளார்.
ரஹ்மானும் அதன் நீட்சியாகத் தொடரவேண்டும் என்பதே நம் விருப்பம். //

புஷ்பவனம் குப்புசாமி பாடல்களை கேட்டுள்ளீர்களா.
மண்ணின் இசையை அளிக்க பலர் உள்ளனர்.
ஆனால் இந்திய இசையை உலகிற்கு அளிப்பவர்கள் வெகு சிலரே

"அப்போ நம் மண்ணின் இசையும் இந்திய இசையும் ஒன்றில்லை என்கிறீர்களா?
செம்மொழியான தமிழ்மொழியாம் பாடலில் கூட நம் மண்ணின் மணமுள்ள கலைஞர்கள் இல்லை. புஷ்பவனம் குப்புசாமி போன்றவர்களே நம் மண்ணின் இயல்பான கலைஞர்கள். அதுசரி பிளாசி யை வைத்து சங்கப் பாடல்களை "Rap" என்னும் பெயரில் "Rape" செய்தவர்தானே ரஹ்மான்? கத்துக்குட்டி யுவன் கூட கிராமிய சூழலில் வந்த பருத்திவீரனில் இயல்பான நாட்டுப்புறப் பாடல்களை அசலாக இடம்பெறச் செய்தார். கிழக்குச் சீமையிலேவில் மற்றும் கருத்தம்மாவில் ரஹ்மான் அப்போதும் கூட மேற்கத்திய இசையையே கலந்து வழங்கியிருந்தார்."

சிந்தசைசருக்கும் பாடல் வரி சிதைவதற்கும் சம்மந்தம் இல்லை !!
வெறும் வயலினை வைத்து கூட பாடல் வரியை சிதைக்க முடியும் :) :)

"உண்மை... சிதைத்தாலும் கண்டுகொள்ளாதவர் ரஹ்மான்."

நான் எப்பொழுதும் இளையராஜாவின் இசையை குறை கூறுவதில்லை.
பெரும்பாலான ரகுமான் ரசிகர்கள் அப்படித்தான்.

ஆனால் ராஜா ரசிகர்களால் ரகுமானை குறை கூறாமல் இருக்க முடியவில்லையே ஏன்?

"நானும் ரஹ்மானின் ரசிகன்தான்.அதற்காக என்னுடைய வருத்தங்களை சொல்வது தவறா?"

எனக்கு பிடித்தது என்பது வேறு சிறந்தது என்பது வேறு இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்.

உங்களுக்கு பிடித்த சமையல்காரர் உங்கள் அம்மா.ஆனால் உலகின் மிகச்சிறந்த சமையல்காரர் உங்கள் அம்மாதான் என்றும் மற்றவர்களுக்கு சமைக்க தெரியாது என்று கூறுவது ஏற்புடையதா?

"அம்மாவே சமைத்தாலும் உப்பு காரம் சரியாக இல்லையெனில் நாம் கூறுவதில்லையா? அதுபோலத்தான் இதுவும்."

இளையராஜாவின் ரசிகர்கள் ஏன் இது போல் ரகுமானை குறை கூற மெனக்கெடுகிறார்கள் என்று தெரியவில்லை.உங்களுக்கே அவர் இசை மேல் நம்பிக்கை இல்லையா
ரகுமானின் பாட்டு நல்லாயில்லை என்று கூற வேண்டிய நிர்பந்தம் உங்களுக்கு வந்தது ஏன் :) :) :)

"புருனோ சார், டென்ஷன் பேடா.. ராஜாவின் இசைமேல் நம்பிக்கை இல்லாமலா இத்தனை இயக்குனர்கள் அவரை விரும்பியிருக்கக்கூடும்?

எனக்கு ரஹ்மானின் மேல் எந்தப் பொறாமையும் வெறுப்பும் இல்லை .சில சிறிய வருத்தங்களே அவர்மேல் உள்ளன.அதுவும் கூட எப்படியெல்லாம் இருந்த நம் ரஹ்மான் எனும் ஆதங்கமே.மற்றபடி ரஹ்மானின் நல்லா இல்லாத பாட்டுக்களையே நான் அவ்வாறு கூறினேன். மற்றபடி ரஹ்மான் விசிறிகள் ராஜாவை தாழ்த்திப் பேசுவது இல்லை என்பது உண்மை அல்ல.பழங்காலத்து ஆள் என்று  கூறுவது உண்டு."
எனினும் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

15 comments:

  1. Raja,and rehman both are just film musicians athil enna ulaga isai thedikittu?

    Ketka nalla iruntha pothum,romba research seythaa vengayam thaan minjum.


    Folk music copy adichar raja, sufi music copy adicha rehman, christian prayer music copy adicha harris jeyaraj.

    Ore tune ah tempo ,instruments maathi potta new tune ena solravanga thaan film musicians.

    Raja symphony veliyittaarnu nambum ulagam, etha sonnaalum nambum!

    ReplyDelete
  2. http://www.itwofs.com/tamil-arr.html

    http://www.itwofs.com/tamil-ir.html

    ReplyDelete
  3. valkayil elithana vishayam aduthavargalai vimarsipathu.... oru thanni manithan... athu illaraja vagatum Ar Rahman agatum... avargal ulaipil uyaranthu irupathai..parata vendum.... vimarsika kudathu.... athuku namakku thaguthi irukiratha endru naam yosika vendum.....

    tharpothu ungal tholil ennavedru enakku theriyathu... oruthar samantham illamal... ungalyum... aduthavarayum "compare" panni vimarsanam kuduthal.. eppadi irukum endru satru sinthith parungal....

    ReplyDelete
  4. """" இளையராஜாவின் இசையை குறை கூறுவதில்லை.
    பெரும்பாலான ரகுமான் ரசிகர்கள் அப்படித்தான்.
    ஆனால் ராஜா ரசிகர்களால் ரகுமானை குறை கூறாமல் இருக்க முடியவில்லையே ஏன்?""""

    இது உண்மை பெரும்பாலும் ராஜா ரசிகர்கள் தங்களுடய தலைவரின் ஆளுமை குறைந்ததை ஏற்று கொள்ள முடியவில்லை.

    ReplyDelete
  5. இளையராஜா பாடல்களை என்றும் கேட்கலாம் ஆனால் ரஹ்மான் பாடல்கள் ஒரு சிலவற்றை தவிர்த்து அனைத்தும் சீசன் பாடல்களே ,அவை மெலடி ஆனாலும் சரி ,குத்து பாடல்களாக இருந்தாலும் இளையராஜா பாடல்களை என்றும் ரசிக்கலாம்.சச்சின் அனைத்து ஆட்டங்களிலும் சதம் அடிப்பது என்பது முடியாத விஷயம் .அது போல் அனைத்து பட பாடல்களும் ஹிட் என்பது இயலாத விஷயம் .இளையராஜா பாடல்களிலும் மட்டும் தனது திறமையை நிருபிக்காமல் பின்னணி இசையிலும் நிருபித்து உள்ளார்.இன்றைய உலகை வெள்ளிச்சம் செய்து காண்பிக்க பல நிறுவனங்கள் உள்ளன ஆனால் இளையராஜா ,MSV காலத்திலு இது போல் இல்லை என்பதை அனைவரும் அறிவர்.சிவாஜிக்கே ஆஸ்கர் கெடைக்காத பொது இளையராஜாவின் பெருமையை எப்படி வெளக்க முடியும் .ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் இளையராஜாவின் தனி திறமையை மறைக்க இயலாது.உங்களின் ப்ளாக் அருமை ,இது போல் இன்னும் அதிகமாக தாருங்கள் .நன்றி

    ReplyDelete
  6. அவனுங்க காச பாத்துகினு போயிகிட்டே இருப்பானுங்க.. பேசாம நெட்டுல பாட்ட டவுன்லோடு பண்ணுனோமா கேட்டமானு இல்லாம....

    சரி சரி, ஏதாவது புது பாட்டுக்கு லிங்க் குடுங்க....

    ReplyDelete
  7. Anony anna ..please check www.123musiq.com for latest songs in all languages..

    ReplyDelete
  8. அவர்கள் இருவருமே மேதைகள்.. அவர்களை ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை..

    ReplyDelete
  9. Isn't it true that ARR stumbled, in fact came out half way from a "Symphony" performance ?. Most of us praise ARR because that seems to be the "trend". We all know the difference between IR and ARR. One must not compare a mountain with a mole hill. OSCAR was just a marketing technique, even die hard ARR fans would agree that "Jai Ho" doesn't deserve an oscar.

    ReplyDelete
  10. Chinna Chinna Aasai is - Veedu Varai Uravu, Mambazhathu vandru, Pesuvathu Kiliya. Ithellam Theriyuma?

    ReplyDelete
  11. Jai Ho - Azhagukkum malarukkum Jaathi Illai

    ReplyDelete
  12. Raja, Enagey Naan kanden Anarkali- Kallelam Manikka Kal aaguma

    Lots of song inspierd by MSv

    MsV too Inspierd by western songs

    ReplyDelete
  13. Raja sir Thaevaram, Rahman sir Vandemataram. Two different Nature.

    ReplyDelete
  14. ILR and ARR are the best in their own generaions.

    We can't compare a Shivaji and Kamal as their are more options for Shivaji then.All the roles from Kattamoban, VaVuSi to Rajinikanth are left there or genearted by good writers for Shivaji.Kamal was left with a very little choice.

    Same with Kannadasan and Vairamuthu.As of I know 90% of the songs the lyrics were witten first before composing the music.When Vairamuthu tried that with Kannuku mai Azhagu or Kaatrin MOzhi the same way he is easily equalvalent to Kannadasan.

    Iam not convinced comparing an Apple with asn Orange. Both taste sweetly:)

    ReplyDelete

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !