Monday, August 3, 2009

என் பதிவுகள்

இந்த வலைப்பூவை ஆரம்பிக்கும்போது அதிக இடைவெளி இன்றி தொடர்ந்து எழுத முடியுமா என்று ஒரு மலைப்பு இருந்தது.வாரம் இரண்டு பதிவுகள் எழுதலாம் என்று எண்ணம். அதுவே பெரிய விஷயம். இந்தவாரம் முதல் வேலைப்பளு சற்று அதிகமாகிறது. எனினும் விடாது தொடர முயல்கிறேன்.

பதிவுகள் பெரும்பாலும் வீட்டில் (பாச்சுலர் என்பதால் ரூமில்.. திருமணமாகாத இளைஞர்கள் தங்குவது எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் அது ரூம் தான்) தாளில் முதல் பிரதி எழுதி , தேவைதான இடங்களில் திருத்தி, பின்பு இரவில் தட்டச்சு செய்து (google indic transliteration உபயோகிக்கிறேன். blogger இல் தமிழில் எழுத்துருக்கள் கொண்டுவரமுடியும் என்றாலும் google indic transliteration இல் சௌகர்யமாக உணர்கிறேன். ) draft இல் சேமித்து பின்பு சமயம் கிடைக்கும்போது பதிவேற்றம் செய்கிறேன்.

நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆவல் தான்.ஆனால் முழுவதும் என் எண்ண ஓட்டத்தில் தோன்றுபவையாக இருக்க வேண்டும் என்பது என் கொள்கை. வெறுமனே பல தகவல்கள் அடங்கிய வலைத்தளங்களின் தொடர்புக்கண்ணிகள் (Links) தருவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒருவேளை இந்த வலைப்பூ மிக வறண்ட நிலைக்கு செல்லுமானால் கொள்கையைக் கொஞ்சம் தளர்த்தலாம். அப்படி ஒரு நிலை வராது என்று நம்புவோம்..!

கடந்த இரண்டு பதிவுகளில் நான் படித்த எஸ்.எம்.ஆர்.வி பள்ளியில் நடந்த சில சம்பவங்கள் பற்றி எழுதியிருந்தேன்.சம்பவங்கள் நிஜத்தில் நடந்தவையே. பதிவின் நாயகனும் நிஜமே. சற்று சுவாரசியப்படுத்த சிறிது நகைச்சுவை கலக்க முயற்சித்திருக்கிறேன். படிப்பவர்களுக்கு வெடிச்சிரிப்பு வராவிடினும் இதழோரம் ஒரு புன்னகை பூத்திருந்தால் எனக்கு வெற்றியே.

கடந்த இரண்டு பதிவுகளைப் படித்த நண்பர்கள் " டேய் நீதானே அந்த முருகேஷ்..? பேரை மாத்தி ஆளை மாத்தி எழுதுறியா? என்கிறார்கள்.அப்படியெல்லாம் இல்லை.

பொதுவாக புதிதாக எழுதுபவர்களுக்கென்று ஒரு பொதுவான எழுத்து நடை இருக்கும். A common pattern. அனேகமாக நானும் அந்த நடையில் தான் எழுதுவதாக எண்ணுகிறேன். இன்னும் எழுத எழுத எனக்கென்று ஒரு பாணி உருவாகலாம். பொறுத்திருந்து பார்ப்போம்... !

0 comments:

Post a Comment

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !