Wednesday, August 19, 2009

தமிழ்க்கிழவி-2

பணம் படைத்தவன் பற்றி அவ்வை சொன்னது ..! எந்தக்காலத்திற்கும் பொருந்தும் :-)

நல்வழிப் பாடல்

கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர்- இல்லானை
இல்லாளும் வேண்டாள்;மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்.

கல்லானே ஆனாலும்- ஒருவன் படிக்காதவன் ஆனாலும்
கைப்பொருள்ஒன் றுண்டாயின்-அவனிடம் செல்வம் (பணம்) இருந்தால்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - எல்லாரும் அவனிடம் சென்று உறவாடுவார்கள்
இல்லானை இல்லாளும் வேண்டாள்-பணம் இல்லாதவனை மனைவி கூட மதிக்க மாட்டாள்
மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள் -ஈன்றெடுத்த தாயும் ஒதுக்குவாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்- அவன் சொல்லுக்கு மதிப்புக் கிடையாது

0 comments:

Post a Comment

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !