Sunday, August 7, 2011

கந்தல் துணி - பாகம் 3


வெகுநாட்களுக்கு முன்பு தமிழ் சினிமாவின் அபத்தங்கள் பற்றி பட்டியலிட ஆரம்பித்தேன். அதன் தொடர்ச்சி இங்கு ;-)

நோயாளியே தீர்க்கதரிசி ஆகும்  அதிசயம் நம் தமிழ் சினிமாவில் தான் நடக்கும். இடைவேளைக்கோ க்ளைமேக்ஸ்கோ முன்பு ஹீரோ அல்லது ஹீரோயிநினின் தாயோ தந்தையோ வில்லனால் கத்தியால் குத்தப் பட்டோ , அல்லது நோயுற்று ஒரு அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியிருப்பர். ஆபரேஷன் தியேட்டரின் முன் குடும்பத்தினரோ தேர்தல் முடிவுகளை தெரிந்துகொள்ளத் துடிக்கும் அரசியல்வாதிகள் போல நிம்மதியற்று குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருப்பார்கள். 
டாக்டர் வெளியிலயே வருவார். கவலைதோய்ந்த முகங்களைப் பார்த்து எங்களால முடிஞ்சத பண்ணிட்டோம் இனிமே எல்லாம் கடவுள் கையில்தான் இருக்கு என்று கூறிவிட்டு, பேஷன்ட் இன்னும் ஐ சி யு லதான் இருக்கார். யாரும் அவங்கள தொந்தரவு பண்ணாதீங்க என்று கூறிவிட்டு நடையைக் கட்டிவிடுவார்.
ஆனால் நம் பேஷன்ட் தான் தீர்க்கதரிசியாயிற்றே. தான் குடும்பத்தினரை சைகையாலையே அழைப்பார் . ஹீரோ போய் கையைப் பிடித்துக் கொள்வார். அம்மா கவலைப் படாதேங்கம்மா .. உங்களுக்கு ஒண்ணும் ஆகாது .. அம்மாவோ , அதெல்லாம் இல்லப்பா இன்னும் நான் ரொம்ப நேரம் இருக்க மாட்டேன்.. என்று கூறிவிட்டு சைடு எபெக்டுக்காக லொக்கு  லொக்கென இருமித் தொலைந்து ஹீரோவுக்கு பீதியைக் கிளப்புவார். மிகுந்த சிரமப்பட்டு ஹீரோ பழிவாங்க வேண்டிய வில்லன் பெயரையோ , அல்லது சண்டையில்  பிரிந்து போன ஹீரோவின் அப்பா பற்றியோ , முக்கி முனகி கூறிவிட்டு செத்தும் போய்விடுவார். ஆபரேஷன் முடிந்து சற்று நேரம் அமைதியாக ஒய்வு எடுத்திருந்தால் கண்டிப்பாக இறந்திருக்க மாட்டார். 

இன்னும் இந்த ஆஸ்பத்திரி காட்சியும் முடிவை இசையாலும் நாம் தெரிந்து கொள்ளலாம். ஆபரேஷன் நடந்துகொண்டிருக்குபோது ஹீரோயின் பூஜையறையில் இருந்து சாமி கும்பிட்டுக்கொண்டு இருப்பார். ஒரு விளக்கு எரிந்து கொண்டிருக்கும். ஆபரேஷனின் காம்ப்லக்சிட்டியைப் பொறுத்து விளக்கு மின்னி மின்னி, எரியவா   அணையவா என்று துடித்துக் கொண்டிருக்கும். ஆபரேஷன் முடிந்துவிட்டது , டொயிங் டொயிங் என்று ஒற்றை தந்தியின் மூலம் வீணையில் முகாரியை கேட்டால் ஹீரோ கதை முடிந்தது என்பது திண்ணம்.ஹீரோ இறந்தால் படம் எப்படி நகரும்? ஹீரோவின் வாரிசு வேடத்தில் இறந்த ஹீரோவே வந்து எதிரிகளைப் பழிவாங்குவார். அதே வீணையில் மங்கள இசை ஒலித்தால் ஹீரோ பிழைத்துக் கொள்வார். 

இவை தவிர மேலும் சில cliche பற்றி  தெரிந்து கொள்ள இங்கே கிளிக்குங்கள் 

1 comment:

  1. நக்கல் தான் :-)) ராஜேஷ்...இப்படி எல்லாம் இருந்தால் தான் தமிழ் சினிமா..இதெல்லாம் இல்லாட்டி ஒலக சினிமாவால ஆய்டும்.:))..அதெல்லாம் கண்டுக்கபடாது...:-))

    ReplyDelete

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !