இந்த வார விகடன் இணைப்பில் (செண்டிமெண்ட் விகடன்) நான் கடந்த பதிவின் தொடர்ச்சியாக (கந்தல் துணி) எழுத நினைத்த ஒன்றைப் பற்றி ரீ.சிவக்குமாரும் எழுதியிருக்கிறார். அட பரவாயில்லையே நாம கூட விகடன்ல வர்ற ஒரு பத்தி அளவுக்கு யோசிச்சிருக்கொமே என்று வியப்படைய ஒன்றுமில்லை.இந்த நொந்து போன செண்டிமெண்ட்ஸ் பத்தி யாரு எழுதினாலும் ஒரே மாதிரிதான் இருக்கும்.
Friday, October 23, 2009
Thursday, October 1, 2009
கந்தல் துணி - பாகம் 1
தமிழ் சினிமா இன்றுவரையில் எண்ணற்ற cliche க்களை கொண்டுள்ளது.பலரும் பல பதிவுகளில் அடித்துத் துவைத்த கந்தல் துணிதான் என்றாலும் என் பங்குக்கு கொஞ்சம் நானும் துவைக்கிறேன். இல்லாவிட்டால் blogger இலக்கணம் மீறப்படுவிட்டதாகிவிடும். எனக்குத் தெரிந்த சிலவற்றைப் பட்டியலிடுகிறேன்.
1. க்ளைமாக்ஸ் ஐ நெருங்கும் சமயம், வில்லன் ஹீரோயினைத் துரத்திக் கொண்டிருப்பான். இருபது வயலின்கள் பின்னணியில் ஆர்ப்பரிக்க ஜீவமரணப் போராட்டத்தில் ஹீரோயின் ஓடிக்கொண்டிருப்பாள்.இருவரும் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு கட்டத்தில் ஹீரோயின் வில்லனின் பின்னால் தூணுக்குப் பின்பாக மறைந்திருப்பாள். வில்லன் அவளைக் காணாமல் தேடிக் கொண்டிருப்பான். ஒரு கட்டை ஹீரோயின் கண்ணில் படும், அந்தக் கட்டையை எடுத்து சத்தம் போடாமல், பதுங்கி வந்து வில்லன் மண்டையில் அடித்தால் தப்பித்து விடலாம்,
1. க்ளைமாக்ஸ் ஐ நெருங்கும் சமயம், வில்லன் ஹீரோயினைத் துரத்திக் கொண்டிருப்பான். இருபது வயலின்கள் பின்னணியில் ஆர்ப்பரிக்க ஜீவமரணப் போராட்டத்தில் ஹீரோயின் ஓடிக்கொண்டிருப்பாள்.இருவரும் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு கட்டத்தில் ஹீரோயின் வில்லனின் பின்னால் தூணுக்குப் பின்பாக மறைந்திருப்பாள். வில்லன் அவளைக் காணாமல் தேடிக் கொண்டிருப்பான். ஒரு கட்டை ஹீரோயின் கண்ணில் படும், அந்தக் கட்டையை எடுத்து சத்தம் போடாமல், பதுங்கி வந்து வில்லன் மண்டையில் அடித்தால் தப்பித்து விடலாம்,
Labels:
சினிமா
Saturday, September 19, 2009
கேட்கப்படாத ஒரு புள்ள பூச்சியின் குரல் (நியாயம்).!
கல்லூரியில் நான்கு வருடங்களும் நான் விடுதியிலேயே தங்கிப் படித்தேன். கடைசி வருடம் மட்டும் நான் வெளியில் அறை எடுத்து தங்குகிறேன் என்று சொன்னதற்கு வீட்டில் மறுத்து விட்டார்கள். கெட்டுப் போய் விடுவேனாம்.நானெல்லாம் " நீ ஊதவே வேணாம் பெருசு" கேஸ் என்பது தெரியாதல்லவா?. வேறு வழியின்றி நான் விடுதியிலேயே தங்க வேண்டியதாயிற்று.
விடுதி எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்களையும் சில கசப்பான அனுபவங்களையும் அளித்திருக்கிறது. பொதுவாக வகுப்பில் ஒரு மூலையில் உக்கார்ந்து "அண்ணே எனக்கு எது புடிக்கலியோ தூங்கிடுவேன்..!" என்று செந்தில் பாணியில் உறங்குபவன் நான்.நான்கு வருடங்களில் வெகு சில பேராசிரியர்கள் தவிர என் பெயர் யாருக்கும் தெரியாது. நாம யாரு வம்புக்கும் போறதில்ல யாரு தும்புக்கும் போறதில்ல.. நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கோம் என்று வடிவேலு பம்மும் விதமாக பம்மிக்கொண்டே வகுப்பிற்கு சென்று வந்து கொண்டிருந்தேன். இரண்டு ஆண்டுகள் இவ்வாறு பிரச்சனை இன்றி கழிந்தது.பரீட்சை நேரங்களில் கூட்டாக சேர்ந்து படிப்பது, அலாரம் வைத்து நள்ளிரவில் எழுந்து படிப்பது என்று இனிய விதமாக நாட்கள் சென்று கொண்டிருந்தன.மூன்றாம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பித்தது சனிதிசை எனக்கு.
விடுதி எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்களையும் சில கசப்பான அனுபவங்களையும் அளித்திருக்கிறது. பொதுவாக வகுப்பில் ஒரு மூலையில் உக்கார்ந்து "அண்ணே எனக்கு எது புடிக்கலியோ தூங்கிடுவேன்..!" என்று செந்தில் பாணியில் உறங்குபவன் நான்.நான்கு வருடங்களில் வெகு சில பேராசிரியர்கள் தவிர என் பெயர் யாருக்கும் தெரியாது. நாம யாரு வம்புக்கும் போறதில்ல யாரு தும்புக்கும் போறதில்ல.. நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கோம் என்று வடிவேலு பம்மும் விதமாக பம்மிக்கொண்டே வகுப்பிற்கு சென்று வந்து கொண்டிருந்தேன். இரண்டு ஆண்டுகள் இவ்வாறு பிரச்சனை இன்றி கழிந்தது.பரீட்சை நேரங்களில் கூட்டாக சேர்ந்து படிப்பது, அலாரம் வைத்து நள்ளிரவில் எழுந்து படிப்பது என்று இனிய விதமாக நாட்கள் சென்று கொண்டிருந்தன.மூன்றாம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பித்தது சனிதிசை எனக்கு.
Labels:
கல்லூரி நாட்கள்
Thursday, September 10, 2009
கவிதை எனப்படுவது யாதெனில்..!
கவிதை எனப்படுவது யாதெனில் வரிவரியா
யெழுதப் படுமுரை நடையாம் .
ரீமிக்ஸ் குறள் நன்றாக இருக்கிறதா? இல்லாவிட்டால் காறி துப்பவும் :-)...
கவிதை எழுவது ஒரு நுட்பமான விஷயம். எல்லோராலேயும் அது முடியாது. "ஒரு ஸ்வீட் ஸ்டாலே" ஒண்ணுக்குக் கீழ ஒண்ணு.. அதானப்பா கவித... "பணியாரம் சாப்பிடுகிறதே" அடடே... ஆச்சரியக்குறி ... என்பதல்ல கவிதை.
யெழுதப் படுமுரை நடையாம் .
ரீமிக்ஸ் குறள் நன்றாக இருக்கிறதா? இல்லாவிட்டால் காறி துப்பவும் :-)...
கவிதை எழுவது ஒரு நுட்பமான விஷயம். எல்லோராலேயும் அது முடியாது. "ஒரு ஸ்வீட் ஸ்டாலே" ஒண்ணுக்குக் கீழ ஒண்ணு.. அதானப்பா கவித... "பணியாரம் சாப்பிடுகிறதே" அடடே... ஆச்சரியக்குறி ... என்பதல்ல கவிதை.
Labels:
பொது
Friday, August 28, 2009
கால்சட்டை (Pants)
ஆங்கிலேய வருகைக்குப் பின் பிரபலமான பேன்ட் எனப்படும் கால்சட்டை நமது அன்றாட வாழ்வில் ஒன்றாகிப் போனது. சின்ன வயதிலிருந்து சொல்லப்போனால் 5 வயதிலிருந்தே பேன்ட் அணிவதை மிகவும் விரும்பியிருக்கிறேன்.அந்த வயதில் டவுசர் (எங்களூரில் நிக்கர் ) அணிந்த நண்பர்கள் கிண்டல் அடிப்பார்கள். "பார்ல .. பேண்டு போட்டுட்டு அப்பிடியே விளையாட வந்திருக்கான்.." என்று. தமிழ் "பேண்டுக்கு" வேறொரு அர்த்தம் இருப்பதை நினைவில் கொள்க.
என் பெரிய மாமா (அம்மாவின் முதல் அண்ணன்) ஒரு மெல்லிய பச்சை நிற சபாரி ஒன்று எனக்கு தந்தார். அது மிகவும் பிடித்தமையால் எப்போதும் அதையே அணிந்து என் ஆச்சி வீட்டுக்குப் போவேன். என் சித்திகள் என்னை பாச்சா உருண்டைக்காரன் என்று கிண்டல் அடிப்பார்கள். அவர்கள்
வீட்டுப் பக்கத்தில் ஒருவன் பேன்ட் சட்டை அணிந்து பாச்சா உருண்டை விற்பனை செய்துகொண்டிருப்பான்.
என் பெரிய மாமா (அம்மாவின் முதல் அண்ணன்) ஒரு மெல்லிய பச்சை நிற சபாரி ஒன்று எனக்கு தந்தார். அது மிகவும் பிடித்தமையால் எப்போதும் அதையே அணிந்து என் ஆச்சி வீட்டுக்குப் போவேன். என் சித்திகள் என்னை பாச்சா உருண்டைக்காரன் என்று கிண்டல் அடிப்பார்கள். அவர்கள்
வீட்டுப் பக்கத்தில் ஒருவன் பேன்ட் சட்டை அணிந்து பாச்சா உருண்டை விற்பனை செய்துகொண்டிருப்பான்.
Labels:
பொது
Wednesday, August 19, 2009
தமிழ்க்கிழவி-2
பணம் படைத்தவன் பற்றி அவ்வை சொன்னது ..! எந்தக்காலத்திற்கும் பொருந்தும் :-)
நல்வழிப் பாடல்
கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர்- இல்லானை
இல்லாளும் வேண்டாள்;மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்.
கல்லானே ஆனாலும்- ஒருவன் படிக்காதவன் ஆனாலும்
கைப்பொருள்ஒன் றுண்டாயின்-அவனிடம் செல்வம் (பணம்) இருந்தால்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - எல்லாரும் அவனிடம் சென்று உறவாடுவார்கள்
இல்லானை இல்லாளும் வேண்டாள்-பணம் இல்லாதவனை மனைவி கூட மதிக்க மாட்டாள்
மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள் -ஈன்றெடுத்த தாயும் ஒதுக்குவாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்- அவன் சொல்லுக்கு மதிப்புக் கிடையாது
நல்வழிப் பாடல்
கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர்- இல்லானை
இல்லாளும் வேண்டாள்;மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்.
கல்லானே ஆனாலும்- ஒருவன் படிக்காதவன் ஆனாலும்
கைப்பொருள்ஒன் றுண்டாயின்-அவனிடம் செல்வம் (பணம்) இருந்தால்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - எல்லாரும் அவனிடம் சென்று உறவாடுவார்கள்
இல்லானை இல்லாளும் வேண்டாள்-பணம் இல்லாதவனை மனைவி கூட மதிக்க மாட்டாள்
மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள் -ஈன்றெடுத்த தாயும் ஒதுக்குவாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்- அவன் சொல்லுக்கு மதிப்புக் கிடையாது
Labels:
தமிழிலக்கியம்
Friday, August 7, 2009
தமிழ்க்கிழவி-1
சங்கப்புலவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் அவ்வையார்தான்.பல அரிய உண்மைகளை எளிய பாடல்களில் அளித்திருக்கிறார். இன்றளவும் அவரது பாடல்களை நான் சிலாகித்து வந்திருக்கிறேன்.மிக எளிய தமிழில் எளிதில் அர்த்தம் புரியும் வகையில் நிறைய பாடல்கள் தந்திருக்கிறார். (இரண்டு மூன்று முறை படித்துப்பார்த்தால் எளிதில் பாடலின் சாராம்சம் புரிந்து விடும்) . இனி அவ்வப்போது அவர் பாடல்களை இங்கு விளக்கத்தோடு காணலாம்.
நல்வழிப் பாடல்
வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் : வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.
புரிகிறதா..? இரண்டு மூன்று முறை திரும்ப வாசித்துப் பாருங்கள்.
விளக்கம் பார்ப்போம்.
வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் - கடினத்தன்மை கொண்டவை
நெகிழ்வான மிருதுவானவற்றை வெல்ல முடியாதாம்.
வேழத்தில் - யானையில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - யானையின் உடம்பில் பாயும் ஈட்டியானது பஞ்சுமூட்டையைத் துளைக்க முடியாது
நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை - நெடிய
இரும்பினால் ஆன கடப்பாரையால் மலையைப் பிளக்க முடியாது.
பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும்.- அதே
மலையில் பசுமையான மரத்தின் வேர்கள் சுலபமாக உள்ளே சென்றிருக்கும்.
நல்வழிப் பாடல்
வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் : வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.
புரிகிறதா..? இரண்டு மூன்று முறை திரும்ப வாசித்துப் பாருங்கள்.
விளக்கம் பார்ப்போம்.
வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் - கடினத்தன்மை கொண்டவை
நெகிழ்வான மிருதுவானவற்றை வெல்ல முடியாதாம்.
வேழத்தில் - யானையில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - யானையின் உடம்பில் பாயும் ஈட்டியானது பஞ்சுமூட்டையைத் துளைக்க முடியாது
நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை - நெடிய
இரும்பினால் ஆன கடப்பாரையால் மலையைப் பிளக்க முடியாது.
பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும்.- அதே
மலையில் பசுமையான மரத்தின் வேர்கள் சுலபமாக உள்ளே சென்றிருக்கும்.
Labels:
தமிழிலக்கியம்
Subscribe to:
Posts (Atom)