நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது- விஞ்சுமலர்த்
தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பாகும் வாழைப் பழம்.
இது கவி காளமேகம் எழுதிய ஒரு சிலேடை . இதை இரட்டுற மொழிதல் என்றும் சொல்வார்கள். இரண்டு பொருள் வரும்படி ஒரே வார்த்தைகளால் பாடுவது சிலேடை. இதன் அர்த்தம் பார்ப்போம் .
நஞ்சிருக்கும் - பாம்பு கொடிய விஷமுடையது
வாழைப்பழம் நைந்து (கனிந்து ) இருக்கும்.
தோலுரிக்கும் - பாம்பு அடிக்கடி தோல் உரிக்கும்.
வாழைப்பழம் தோலுரித்து உண்ணப்பட வேண்டியது.
நாதர்முடி மேலிருக்கும்- பாம்பு சிவபெருமான் தலையில் இருக்கும்.
வாழைப்பழம் பஞ்சாமிர்தமாக அபிஷேகம்
செய்யப்பட்டு லிங்கத்தின் மீது காணப்படும்.
வெஞ்சினத்தில் பல்
பட்டால் மீளாது - பாம்பு கொத்தினால் நம் உயிர் மீளாது.
கூட்டு பொரியலாக செய்யப்படும் வாழைக்காய்
மீது நம் பல் பட்டால் அது மிஞ்சாது.
இவ்வாறு தேன் பாயும் சோலைகள் உள்ள திருமலைராயன் மலையில் பாம்பும் வாழைப்பழமும் ஒன்றாகும். என்பதே இதன் அர்த்தம்.
http://pm.tamil.net/pub/pm0220/kalamega.pdf
என்னடா ஏதோ foot ball தேங்காய் என்று தலைப்பிட்டுவிட்டு செய்யுளுக்கு விளக்கம் தருகிறானே என்று பார்க்கிறீர்களா? தொடர்பு உண்டு.