Saturday, April 23, 2011

இந்தியா தமிழனின் நாடா?


இதுநாள் வரையிலும் நானும் ஒரு இந்தியன் என்பதில் மிகுந்த பெருமை கொண்டிருந்தேன்.. இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்..இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம் என்று சிறுவயது பாடப்புத்தகங்களில் எழுதப் பட்டிருந்த வாசகங்களைப் புரியாத வயதில்  படித்துப் புளகாங்கிதம் அடைந்திருக்கிறேன்.   இப்போது என் நிலையை மாற்றிக் கொள்ளும் அளவிற்கு கடந்த சிலவருடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னைக் கொதிக்கச் செய்கின்றன. இருந்தாலும் கையாலாகாத தமிழினத்தில் ஒரு மெல்லிய ஈனஸ்வரத்தோடு முனகுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாத என் நிலையை எண்ணி வெம்பிக்கொண்டிருக்கின்றேன்.

இதனால் நான் இந்திய இறையாண்மையை மீறிவிட்டேன் என்றால் அது குறித்து எந்தக் கவலையும் எனக்கு இல்லை. ஏனெனில் இன்றைய இந்தியாவில் தனித்து விடப்பட்ட ஒரு தேசிய இனக்குழு எதுவென்றால் அது நம் தமிழினம்தான். துவேஷம் வளர்ப்பதில் எனக்கு எவ்வித உடன்பாடும் இல்லை..எனினும் சில விஷயங்களைப் பற்றி சற்று நிதானமாக சிந்தித்துப் பார்த்தால் கோபம் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை..

பீடிகைகள் போதும் நேராக விஷயத்திற்கு வருவோம்.
சில வாரங்களுக்கு  முன்பு நான்கு தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டனர் .. நன்றாகக் கவனிக்கவும் "தமிழக மீனவர்கள் " என்று நான் குறிப்பிடக் காரணம் 
நமது தேசிய ஊடகங்கள் அவ்வாறுதான் முன்பு குறிப்பிட்டன .. இறந்தது இந்திய மீனவனில்லையாம் தமிழ் மீனவனாம். ஆக துவேஷம் நம்மளவில் இல்லை.ஒட்டு மொத்த  நாடே நம்மை ஒதுக்கியாயிற்று. மிக்க மகிழ்ச்சி.. ( வேறு வார்த்தைகள் தேடினால் கெட்டவார்த்தைகள் தான் தோன்றுகின்றன) சரி கொல்லப்பட்டதன் காரணம் ? இலங்கை அணி கிரிக்கெட்டில் இந்தியாவிடம் உலகக்  கோப்பையை இழந்து விட்டதாம். இது நாளேடுகளில் வந்த செய்தி.இந்தக் காரணமானது எந்த அளவிற்கு நம்பகமானது என்பதில் சில ஐயங்கள் இருந்தாலும் , ராமநாதபுரம் கடல் எல்லையில் மீனவன் கொல்லப்பட்டால் அதன் காரணம் கண்டிப்பாக இலங்கை ஓநாய்ப் படையைத் தவிர யாராக இருக்க முடியும்.? 
















எதிரி நாடான பாகிஸ்தான் நம் நாட்டு மீனவர்கள் அவர்கள் எல்லைக்குள் சென்றால் கைது செய்து முறையாக நம் நாட்டிற்கே திருப்பி அனுப்புகிறார்கள். குறைந்தபட்சம் கொல்வதில்லை. இதற்காக நான் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும் ? அவன் ஒரு குஜராத்தி மீனவனோ அல்லது மராத்தி மீனவனோ தானே ? அவன் செத்தால் என்னவென்று நான் யோசித்ததில்லை.ஏனென்றால் நான் ஒரு இந்தியன் .
நான் மட்டும் ஏன் என்னை ஒரு இந்தியன் என்று நினைத்து இந்த நாறிப்போன தேசிய நீரோட்ட இறையாண்மை கருமாந்திரத்துக்குள் இணைத்துக் கொள்ளவேண்டும்?

கேனைத் தமிழர்களான நாம் ஒன்றை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும் .. 
ஒரிசா மழை நிவாரணத்திற்கு அதிக நிதி கொடுத்தது தமிழன்
குஜராத் பூகம்பத்திற்கு அதிக நிதி கொடுத்தது தமிழன் 
கார்கில் போர் இழப்பிற்காக அதிக நிதி கொடுத்தது தமிழன் 
இப்படி இந்த இந்தியாவில் தலையிலிருந்து கால்வரை எந்தப் பகுதியில் ஒரு இயற்கைப்  பேரிடரோ , போரோ ஏற்பட்டாலும் தனக்கு நிகழ்ந்ததாக எண்ணி கண்ணீர் வடிப்பவன் தமிழன்.

அதற்கு கைம்மாறாக இந்த ஒட்டு மொத்த இந்தியாவும் நம்மை ஒதுக்கிவிட்டது.  ஊடகங்களிலிருந்து அரசியல் வரை தமிழன் ஒரு தீண்டத்தகாதவனாகவும் தமிழனுக்கு நேரும் துன்பம் கண்டால் எந்த எதிர்வினையும்  காட்டாத நாடாக இந்தியாவும் மாறிவிட்டது. 



















நம் மீனவர்கள் கொல்லப்பட்ட விஷயத்திற்கு வருவோம். இந்த  சம்பவம் நடப்பதற்கு சில நாட்கள் முன்புதான் அன்னை சோனியா காந்தி , நமது முதுபெரும் இனமானத் (தற்போது ஈனமான) தமிழர் கருணாநிதியோடு இணைந்து தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்தார். நமது மக்களுக்கு வாக்களித்தார் ..இனிமேல் கடலில் தமிழன் குருதி வீழாது என்று. சொல்லிச் சென்ற சிலதினங்களில் குருதி வாராமல் அடித்தே மூன்று பேரையும் முண்டமாக்கி ஒருவனையும் கொன்று  அனுப்பின அரக்க வம்ச சிங்கள ஓநாய்கள். சில மாதங்களுக்கு முன்பு மண் (எழுத்துப் பிழை அல்ல ) மோகன் சிங் இனிமேல் தமிழன் மீது துப்பாக்கிச்சூடு இருக்காது என்று வாக்களித்தார். உடனே ஜெயக்குமார் என்ற மீனவனின் கழுத்தில் சுருக்கிட்டுக் கொன்று அனுப்பின அந்த ............. ( இரக்கமில்லாத அரக்கர்களை எவ்வாறு திட்டுவது) பயல்கள் .ஒவ்வொருமுறையும் தமிழக மீனவன் கொல்லப்படமாட்டான் என்று இவர்கள் வாக்களிக்கும்போதும், எவ்வாறு தமிழக மீனவனைக் கொல்வது என்னும் உத்தியை சிங்கள ............. பயல்களுக்கு இவர்களே சொல்லிக் கொடுப்பது போலுள்ளது.

இலங்கையில் இது போன்று தொடர்ந்த அடக்குமுறைகளினால்தான் LTTE இயக்கம் தோன்றியது . அதன்பின்பு இந்தியா தலையிட்டதும் ராஜீவ் காந்தியின் அமைதிப்படை அத்துமீறியதும் தொடர்ந்த துன்பியல் நிகழ்வுகளும் அதைத்தொடர்ந்து சோனியா அன்னை கொண்ட பழிவாங்கும் படலமும் ஒரு இனத்தையே வேரோடு அறுத்துக் கொண்டிருக்கின்றது. இத்தனை நாள் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவது தவறு என்று மறுதலித்த நம் இந்திய அரசு இன்று சொந்த நாட்டுக்காரனையே பாதுகாக்க தவறி இருக்கின்றது.
 2008 நவம்பர் 26  அன்று பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் ஆடிய வெறியாட்டத்திற்கு எந்த விதத்திலும் குறைவாகிவிடாது கடலில்  சிங்கள ....... பயல்கள் ஆடும் கொலைவெறித் தாண்டவம்.எதிரி நாடு என்று சொல்லி அடித்ததனால் சற்றே கடினம் காட்டிய இந்திய அரசு , நட்பு நாடு என்று சொல்லி அடிக்கும் இலங்கையைக் கண்டு கொள்வதே இல்லை. ஏனெனில் அடிவாங்குவது தமிழன் தானே. 

ஒற்றை படைவீரனைத் தாக்கியதற்காக பாலஸ்தீனம் மீது போர் தொடுத்த இஸ்ரேல் எங்கே? (இஸ்ரேல் ஒன்றும் உத்தமமான நாடு இல்லை. எனினும் தன் குடிமகனைக் காக்கும் அறவுணர்ச்சி பாராட்டப் பட வேண்டிய விஷயம்). சொந்த நாட்டு மக்கள் 500 பேரைக்  காரணமின்றி கொன்ற சுண்டைக்காய் நாடு இலங்கையிடம் கண்டிப்பு காட்டாத இந்தியா எங்கே?  ஒருகாலத்தில் CK நாயுடு கோப்பைக்காக தமிழக  அணியுடன் கிரிக்கெட் விளையாடிய  இலங்கை இன்று சீனா உதவியுடன் இந்தியாவின் காலைக் குத்திக் கொண்டிருக்கின்றது . 
என்ன ஒரு முரண் பாருங்கள் ராஜபக்சே குருவாயூர் செல்கிறான் , திருப்பதி செல்கிறான் விட்டால் கருணாநிதி தோளில் கை போட்டுக்கொண்டு தஞ்சாவூர் வருவான்.. நமது நாட்டில் அவனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு வேறு ..! கொஞ்சமேனும் ஒரு குற்ற உணர்ச்சி இருந்தால் நம் அரசாங்கம் இப்படி செய்யுமா? இன்று ராஜபக்சேவால் இந்தியா தவிர எந்த நாட்டுக்குள்ளும் நுழைய முடியாது ஏனெனில்  உண்மையிலேயே சொரணையுள்ள நம் ஈழத்தமிழர்கள் துரத்தி அடிப்பார்கள். 


















ஆனால் கோழைத் தமிழனான நமக்கு ஒரு கவலையும் இல்லை . நமக்கு வேண்டியதெல்லாம் இம்முறை மிக்சி கிடைக்குமா , லேப்டாப் கிடைக்குமா என்ற கவலைதான்.
நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன் இனிமேல் இந்தியாவில் எந்த ஒரு பேரழிவோ , துயரோ நிகழ்ந்தாலும் ( நிகழக் கூடாது ) எந்த வகையான உதவியும் செய்யப் போவதில்லை .. என் இனம் சாகும்போது இந்தியாவில்  எவனும் ஒரு மயிரையும் பிடுங்கவில்லை.. நானும் அவர்களுக்காக ஒரு மயிரையும் பிடுங்கப்போவதில்லை . வாழ்க தமிழினம் ( அட போங்கப்பா )..!

படங்களுக்கு நன்றி : Google

Saturday, February 12, 2011

எங்கே நம் இளையராஜா ?

புதிய மில்லினியத்தில் இளையராஜாவின் இசை குறித்த என் அலசல் இப்பதிவு.
1960 முதல் 1970 இன் இறுதிவரை தமிழ் திரையிசையில் கோலோச்சிய மெல்லிசை மன்னர் MSV, இளையராஜா என்னும் இசைக் கலைஞனின் வரவிற்குப் பிறகு மெல்ல மெல்ல காணாமல் போனார். அன்னக்கிளியிலிருந்து 16 வயதினிலே, அவள் அப்படித்தான் , முள்ளும் மலரும், பிரியா , நிழல்கள் , உல்லாசப் பறவைகள் என்று அதிரடி கிளப்பிக் கொண்டிருந்தபோது , சாம்பலிலிருந்து மீண்டு எழும் பீனிக்ஸ் பறவையென நினைத்தாலே இனிக்கும் மூலம் MSV  அதிர்ச்சி அளித்தார்.பழைய  பாணியில் இசையமைப்பதினாலேயே MSV காணாமல் போனார் என்று நினைத்த மக்களுக்கு நினைத்தாலே இனிக்கும் பாடல்கள் அன்றைய ட்ரெண்டுக்கு இருந்தமையால் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இன்றளவும் உற்சாகம் குறையாத பாடல்கள் அவை. அதன்பின்பு அத்தனை உற்சாகமான பாடல்களோ மெலடிகளோ அவரிடமிருந்து வெளிப்படவில்லை என நினைக்கிறேன். அதுகுறித்து அதிக தகவல்கள்  என் ஞாபகத்தில் இல்லை. பொதுவில் இளையராஜா துவக்க நாட்களில் இசையமைத்த முறையானது  70  களின் இறுதியில் msv   இசையமைக்கும் முறையை ஒத்திருந்தது. பின்பு வேகம் பெற்ற ராஜா இந்திய திரையிசையின் ஒப்பற்ற உன்னத கலைஞனானார்.

காலம், வரலாற்றின் நிகழ்வுகளை அடிக்கடி மீள்பதிவு செய்யும். இம்முறை  msv இன் இடத்தில் நமது ராஜா , ராஜா இடத்தில் ரஹ்மான். 1992 இல் அறிமுகமாகி ரோஜா, புதியமுகம், டூயட், திருடா திருடா என்று அதிரடி கிளப்பிக்கொண்டிருந்த ரஹ்மான் குறைவான படங்களை செய்து கொண்டிருந்தாலும் புதிய ரக இசையால் பெரிதும் விரும்பப் படுபவராய் இருந்தார். ராஜாவும் 1992 - 1997 வரையான காலகட்டத்தில் ஒன்றும் சளைத்துவிடவில்லை, மெல்ல மெல்ல தபேலாவும் மிருதங்கமும் அவரது பாடல்களிலிருந்து மறையத்தொடங்கியது ( முற்றிலுமாக இல்லை ) இந்த கால கட்டங்களில்தான். ராஜா அவருக்கென்றே உரித்தான பாணியை பெரிதும்  மாற்றாமலேயே தொடர்ந்தார்.






இந்த காலகட்டத்தில்தான் தேவாவும் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார்.ஆசை பாடல்கள் குறித்து விகடன் விமர்சனத்தில் " தேவா எப்போ இளையராஜவிலிருந்து ரஹ்மான் பக்கம் வந்தீர்கள் என்று எழுதியிருந்தது ஞாபகம் இருக்கிறது.பாடல்களில் தபேலாவின் ஆதிக்கம் குறைந்து டிரம்ஸ் ஆதிக்கம் அதிகமானது 
1996 இல் சட்டென்று இளையராஜாவுக்கு ஒரு தொய்வு ஏற்பட்டது போன்ற தோற்றம் நிலவியபோது காதலுக்கு மரியாதை மூலம் மிரட்டினார் ராஜா. MSV க்கு ஒரு நினைத்தாலே இனிக்கும் போல ராஜாவுக்கு காதலுக்கு மரியாதையை ஒரு "COMEBACK" ஆக அமைந்தது.
1996 - 2001 வரையிலான  சமயத்தில் தேவா , S.A.ராஜ்குமார், சிற்பி போன்ற இசையமைப்பாளர்களின் எழுச்சி புதிய இயக்குனர்களுக்கும் , சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது , தேவா ஆங்கிலம் மற்றும் ஹிந்தி , S.A.ராஜ்குமார் பெரும்பாலும் ஹிந்தி , சிற்பியோ பஞ்சாபி மற்றும் ஹிந்தி என்று காப்பிக்கடை நடத்திக் கொண்டிருந்தனர். மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குனர்கள் ரஹ்மானையும், மற்றவர்கள் தேவா சிற்பி போன்ற இசையமைப்பாளர்களிடமும் சென்றுவிட்டதால் ராஜாவைத் தேடுவோர் வெகுவாகக் குறைந்தனர். ராஜாவும் மெல்ல ஒதுங்க ஆரம்பித்தார்.
பாலச்சந்தர் , பாலுமகேந்திரா , பாரதிராஜா, மணிரத்னம் போன்ற ஜாம்பவான் இயக்குனர்களின் இசை ரசனை புதிய இயக்குனர்களிடம் காணப்படாததும் கூட ராஜாவின் தொய்வுக்கு ஒரு காரணம் . 
அதன் பின்பு ராஜாவின் இசைகேட்டு வளர்ந்து ராஜாவை தன் ஆதர்சமாக எண்ணிய இயக்குனர்களே ராஜாவை அணுகினர். குறிப்பாக பாலா , சேது படத்திற்கு  வியாபார ரீதியில் முக்கியமான  விஷயமாக அமைந்தது ராஜாவின் இசை என்றால் மிகையல்ல.பின்பு நந்தா தவிர்த்து பிதாமகன், நான்கடவுள் என ராஜாவிடம் வேண்டிய இசையை கேட்டுப் பெறுபவர் பாலா மட்டுமே.
மற்ற சாதாரண இயக்குனர்களின் படங்களுக்கு மிகச்சாதாரணமாகவே இசையமைத்திருக்கிறார் இளையராஜா என்பேன்
சேதுவுக்கு அப்புறம் ராஜா இசையமைப்பில் வெளிவந்த படங்களையும் பாடல்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். எனினும் கிட்டத்தட்ட 2005 ஆம் ஆண்டுவரை கூட அவர் இசையமைப்பில் வந்த சொற்ப படங்களில் நிறைவான இசையையே வழங்கியிருந்தார். எனினும் 80 மற்றும் 90 களில் அவர் இருந்த வீச்சினை ஒப்பிடும்போது அது குறைவுதான்.
ஹேராம், மும்பை எக்ஸ்பிரஸ், விருமாண்டி என்று ராஜாவை விட்டுவிடாமல் தொடர்ந்து பயன்படுத்தி வந்தவர் கமல். அவரும் தற்போது கட்சிமாறிவிட்டதால் தரமான ராஜா பாடல்கள் கிடைப்பது  சிரமமாகி விட்டது
அழகி, சொல்லமறந்த கதை , காசி, பாரதி, பிரண்ட்ஸ், ஒருநாள் ஒரு கனவு, கண்ணுக்குள் நிலவு , போன்ற படங்கள் 2005 ஆம் ஆண்டுக்குள் வந்த சில நல்ல பாடல்கள் அடங்கியவை.










அதன் பின்பு வந்த ஆண்டுகளில் ராஜா அளித்தது பெரும்பாலும் ஏமாற்றமே
உதாரணத்திற்கு சில படங்களைப்  பார்ப்போமே , தனம் , உளியின் ஓசை , கண்களும் கவி பாடுதே, ஜெகன் மோகினி , வால்மீகி , மிகச் சமீபத்தில் அய்யன் .
படங்களும் நினைவிருக்காது பாடல்களும் நினைவிருக்காது
ஒருகாலத்தில் புதிய இயக்குனர்களுக்கு பலமே ராஜாவின் இசைதான். செல்லத்தாயி, புதுநெல்லு புதுநாத்து , ஆவாரம்பூ, போன்ற படங்கள் நம் நினைவில் இல்லாவிட்டாலும் பாடல்கள் என்றும் நினைவிலிருக்கும்
தற்போது வரும் இயக்குனர்கள் இளையராஜாவிடமிருந்து ஏன் நல்ல இசையைப் பெற முடியவில்லை என்பது புரியவில்லை
சமீப காலங்களில் ஹிந்தியிலும் ராஜா இசை அமைக்கும்  படங்களின் பாடல்கள் நன்றாக உள்ளன, காரணம் அவை எல்லாம் 80 களின் மீளாக்கமே.ஜேம்ஸ், சீனி கம், பா போன்றவை சில உதாரணங்கள்
ராஜா சகாப்தம் முடிந்து விட்டதா? ஒருவேளை ராஜா ஓய்வு பெற எண்ணினாலும் ஒரே ஒரு படம் நச்சென்று அடித்து அதிரவைத்துவிட்டு ஓய்வு பெறட்டுமே 

ராஜா பற்றிய எனது  முந்தைய பதிவுகளைப் பார்க்க 

வருத்தத்துடன் ஒரு ராஜா ரசிகன்