Tuesday, February 9, 2010

சொர்க்கமே என்றாலும்

எழில்மிகு நாஞ்சில் நாடு... இப்புவியில் ஒரு சொர்க்கம் !

ரப்பர் காடுகள் - கீரிப்பாறை போகும் வழி 

(படங்களைப் பெரிதாக்க மேலே சொடுக்கவும்..!)

 

Friday, February 5, 2010

நான் மொழியறிந்தேன்

தமிழ்நாட்டில் பிறந்ததற்காக நான் வருத்தப்படும் ஒரே விஷயம் பிற மொழிகளைக் கற்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்பதுதான்.என் அம்மா அப்பா நன்றாக மலையாளம் பேசுவார்கள்.எனக்கும் அக்காவுக்கும் தம்பிக்கும் நன்றாக மலையாளம் புரியும் என்றாலும் பேச முயற்சிப்பதில்லை.எப்பொழுதாவது திருமணங்களில் உறவினர்களைப் பார்க்கும் போது அவர்கள் மலையாளத்தில் ஏதாவது கேட்டால் தமிழில் பதில் கூறுவோம். "ஓ அவரொக்க தமிழாணோ?" என்று அம்மா அப்பாவைப் பார்த்துக் கேட்பார்கள். குமரி மாவட்டம் பண்டைய திருவிதாங்கூரின் ஒரு பகுதி என்பதால் மலையாளம் காதுகளில் விழுந்துகொண்டே இருக்கும் வாய்ப்பு அதிகம். அதனால் ஒருமாதிரியாக என்னால் சமாளிக்க முடியும்.அப்புறம் ஆங்கிலம். ஆங்கில வழியில் பள்ளியில் படித்தாலும் அதிகம் பேசியதில்லை. ஆனால் கல்லூரியின் இறுதிக்காலங்களில் ஆங்கிலம் பேசியே ஆகவேண்டிய கட்டாயத்தினால் ஒருவாறு பேசத்தொடங்கினேன்.தற்சமயம் போதுமான அளவுக்கு பிழையின்றி பேசவும் எழுதவும் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

Friday, January 29, 2010

சிம்மசொப்பனம்

இதுவரை நான் கூறிய தமிழ் வகுப்பு அனுபவங்களிலிருந்து இப்போது நான் கூறப் போவது சற்று வித்தியாசமானது.பொதுவாக தமிழாசிரியர் என்றதும் நம் நினைவுக்கு வரும் பிம்பம் என்ன? நெற்றியில் விபூதிப் பட்டை லேசான முன்வழுக்கை நடுத்தர அல்லது ஓய்வை நெருங்கும் வயது வெள்ளை வேஷ்டி சட்டை, சுருக்கமாகச் சொல்வதானால் ஒரு வாத்தியார் ராமன், பூர்ணம் விஸ்வநாதன் , சங்கரன்,சோமயாஜுலு போன்றவர்களின் தோற்றம்.எங்கள் ஒன்பதாம் வகுப்பு தமிழாசிரியர் திருவாளர் நாகராஜன் அவர்கள். சார் நடுத்தர வயதுக்காரர், வேஷ்டி தவிர்ப்பவர், (பேன்ட் அணிந்திருப்பார்).மற்றபடி சிறிய விபூதி கீற்றுடன் ஒரு அக்மார்க் தமிழாசிரியர் தான்.

Wednesday, January 20, 2010

தாய் மீது சத்தியம்

சமீபகாலமாக அரசு விரைவுப் பேருந்துகளில் "BOOM TV" மூலமாக திரைப்படங்கள் பாடல்கள் நகைச்சுவைக் காட்சிகள் என ஒரு கலவையாக ஒளிபரப்புகிறார்கள்.நல்ல விஷயம் தானே ,பேருந்தில் சலிப்பின்றி செல்லலாமே என நீங்கள் எண்ணலாம். எப்பொழுதாவது பயணம் செய்பவர்களுக்கு உங்கள் வாதம் பொருந்தும் .அடிக்கடி பயணம் செய்யும் என் போன்றவர்களுக்கு சில சமயங்களில் இந்த கேளிக்கை சாதனம் ஒரு தலைவலியாக அமைவதுண்டு.

எனக்கு நடந்த ஒரு கொடுமையான அனுபவத்தைப் பற்றி சொல்கிறேன்.

Friday, November 20, 2009

ஸ்பூனரிசம் (Spoonerism)

சில சமயம் நாம் பேசும் பொது வார்த்தைகளின் எழுத்துக்களை மாற்றி உச்சரித்து புதிய வார்த்தைகளை தவறுதலாக உருவாக்குவோம்.எல்லாருமே எதோ ஒரு சமயம் அப்படி tongue slip ஆகியிருப்போம். உதாரணம் ஓடிப் போனான் , போடி ஓனான். ஒரு அக்றிணை பிறவியை போடி வாடி என்று கூறுவது போல் ஆகிவிட்டது.கல்லூரி நாட்களில் நான் இவ்வாறு யோசித்திருக்கிறேன்.பெரும்பாலும் நாடாளுமன்றத்தில் உபயோக்கியமுடியாத வார்த்தைகள்.(Unparliamentary words ).

Wednesday, November 11, 2009

தமிழ் வகுப்பும் நகைச்சுவையும்..!

பள்ளிநாட்களில் நான் அதிகம் ரசித்தது தமிழ் வகுப்புகளே. மிக்க சுவாரஸ்யமானவை. காரணம் பாடங்கள் அல்ல. அவ்வகுப்புகளின்போது அரங்கேறும் நகைச்சுவை நிகழ்வுகள்தான்.குறிப்பாக 8 மற்றும் 9 ஆம் வகுப்புகளின் தமிழ்ப்பாடவேளைகளை என்னால் மறக்கவே முடியாது. முதலில் 8 ஆம் வகுப்பு பற்றி சொல்கிறேன். 9 ஆம் வகுப்பு பற்றி அப்புறம். 8 ஆம் வகுப்பில் கல்யாண சுந்தரம் சார்.மழித்த மீசை. நல்ல உயரம், அதற்கேற்றார் போல தேகம்.வேஷ்டி சட்டையில் ஒரு கச்சிதமான தமிழாசிரியருக்கான இலக்கணங்களுடன் வருவார்.கண்ணாடியை விட்டுவிட்டேன். எல்லா தமிழ் வாத்தியார்களைப் போலவே கண்ணாடியும் அணிந்திருப்பார். சுருங்கச் சொல்வதெனின் ஒரு நேர்மையான தமிழாசிரியர்.
சிலசமயங்களில் வேஷ்டியின் நுனியால் காதைக் குடைந்துகொண்டே அடுக்கு மொழியில் "அதனை எடுத்து... கொடுத்து... உடுத்து... " என்று பாடம் நடத்துவது அவ்வளவு ரம்யமாக இருக்கும்.ஆனால் பிரம்பைக் கையில் எடுத்தார் என்றால் தொலைந்தோம். ஒருமுறை ஸ்ரீராம் வாங்கிய அடியைப் பார்த்து நாங்களெல்லாம் கழிந்து விட்டோம்.

Friday, October 23, 2009

கந்தல் துணி - பாகம் 2

இந்த வார விகடன் இணைப்பில் (செண்டிமெண்ட் விகடன்) நான் கடந்த பதிவின் தொடர்ச்சியாக (கந்தல் துணி) எழுத நினைத்த ஒன்றைப் பற்றி ரீ.சிவக்குமாரும் எழுதியிருக்கிறார். அட பரவாயில்லையே நாம கூட விகடன்ல வர்ற ஒரு பத்தி அளவுக்கு யோசிச்சிருக்கொமே என்று வியப்படைய ஒன்றுமில்லை.இந்த நொந்து போன செண்டிமெண்ட்ஸ் பத்தி யாரு எழுதினாலும் ஒரே மாதிரிதான் இருக்கும்.