எனக்கு நடந்த ஒரு கொடுமையான அனுபவத்தைப் பற்றி சொல்கிறேன்.
Wednesday, January 20, 2010
தாய் மீது சத்தியம்
சமீபகாலமாக அரசு விரைவுப் பேருந்துகளில் "BOOM TV" மூலமாக திரைப்படங்கள் பாடல்கள் நகைச்சுவைக் காட்சிகள் என ஒரு கலவையாக ஒளிபரப்புகிறார்கள்.நல்ல விஷயம் தானே ,பேருந்தில் சலிப்பின்றி செல்லலாமே என நீங்கள் எண்ணலாம். எப்பொழுதாவது பயணம் செய்பவர்களுக்கு உங்கள் வாதம் பொருந்தும் .அடிக்கடி பயணம் செய்யும் என் போன்றவர்களுக்கு சில சமயங்களில் இந்த கேளிக்கை சாதனம் ஒரு தலைவலியாக அமைவதுண்டு.
எனக்கு நடந்த ஒரு கொடுமையான அனுபவத்தைப் பற்றி சொல்கிறேன்.
எனக்கு நடந்த ஒரு கொடுமையான அனுபவத்தைப் பற்றி சொல்கிறேன்.
Labels:
சினிமா
Friday, November 20, 2009
ஸ்பூனரிசம் (Spoonerism)
சில சமயம் நாம் பேசும் பொது வார்த்தைகளின் எழுத்துக்களை மாற்றி உச்சரித்து புதிய வார்த்தைகளை தவறுதலாக உருவாக்குவோம்.எல்லாருமே எதோ ஒரு சமயம் அப்படி tongue slip ஆகியிருப்போம். உதாரணம் ஓடிப் போனான் , போடி ஓனான். ஒரு அக்றிணை பிறவியை போடி வாடி என்று கூறுவது போல் ஆகிவிட்டது.கல்லூரி நாட்களில் நான் இவ்வாறு யோசித்திருக்கிறேன்.பெரும்பாலும் நாடாளுமன்றத்தில் உபயோக்கியமுடியாத வார்த்தைகள்.(Unparliamentary words ).
Labels:
பொது
Wednesday, November 11, 2009
தமிழ் வகுப்பும் நகைச்சுவையும்..!
பள்ளிநாட்களில் நான் அதிகம் ரசித்தது தமிழ் வகுப்புகளே. மிக்க சுவாரஸ்யமானவை. காரணம் பாடங்கள் அல்ல. அவ்வகுப்புகளின்போது அரங்கேறும் நகைச்சுவை நிகழ்வுகள்தான்.குறிப்பாக 8 மற்றும் 9 ஆம் வகுப்புகளின் தமிழ்ப்பாடவேளைகளை என்னால் மறக்கவே முடியாது. முதலில் 8 ஆம் வகுப்பு பற்றி சொல்கிறேன். 9 ஆம் வகுப்பு பற்றி அப்புறம். 8 ஆம் வகுப்பில் கல்யாண சுந்தரம் சார்.மழித்த மீசை. நல்ல உயரம், அதற்கேற்றார் போல தேகம்.வேஷ்டி சட்டையில் ஒரு கச்சிதமான தமிழாசிரியருக்கான இலக்கணங்களுடன் வருவார்.கண்ணாடியை விட்டுவிட்டேன். எல்லா தமிழ் வாத்தியார்களைப் போலவே கண்ணாடியும் அணிந்திருப்பார். சுருங்கச் சொல்வதெனின் ஒரு நேர்மையான தமிழாசிரியர்.
சிலசமயங்களில் வேஷ்டியின் நுனியால் காதைக் குடைந்துகொண்டே அடுக்கு மொழியில் "அதனை எடுத்து... கொடுத்து... உடுத்து... " என்று பாடம் நடத்துவது அவ்வளவு ரம்யமாக இருக்கும்.ஆனால் பிரம்பைக் கையில் எடுத்தார் என்றால் தொலைந்தோம். ஒருமுறை ஸ்ரீராம் வாங்கிய அடியைப் பார்த்து நாங்களெல்லாம் கழிந்து விட்டோம்.
சிலசமயங்களில் வேஷ்டியின் நுனியால் காதைக் குடைந்துகொண்டே அடுக்கு மொழியில் "அதனை எடுத்து... கொடுத்து... உடுத்து... " என்று பாடம் நடத்துவது அவ்வளவு ரம்யமாக இருக்கும்.ஆனால் பிரம்பைக் கையில் எடுத்தார் என்றால் தொலைந்தோம். ஒருமுறை ஸ்ரீராம் வாங்கிய அடியைப் பார்த்து நாங்களெல்லாம் கழிந்து விட்டோம்.
Labels:
பள்ளி நாட்கள்
Friday, October 23, 2009
கந்தல் துணி - பாகம் 2
இந்த வார விகடன் இணைப்பில் (செண்டிமெண்ட் விகடன்) நான் கடந்த பதிவின் தொடர்ச்சியாக (கந்தல் துணி) எழுத நினைத்த ஒன்றைப் பற்றி ரீ.சிவக்குமாரும் எழுதியிருக்கிறார். அட பரவாயில்லையே நாம கூட விகடன்ல வர்ற ஒரு பத்தி அளவுக்கு யோசிச்சிருக்கொமே என்று வியப்படைய ஒன்றுமில்லை.இந்த நொந்து போன செண்டிமெண்ட்ஸ் பத்தி யாரு எழுதினாலும் ஒரே மாதிரிதான் இருக்கும்.
Labels:
சினிமா
Thursday, October 1, 2009
கந்தல் துணி - பாகம் 1
தமிழ் சினிமா இன்றுவரையில் எண்ணற்ற cliche க்களை கொண்டுள்ளது.பலரும் பல பதிவுகளில் அடித்துத் துவைத்த கந்தல் துணிதான் என்றாலும் என் பங்குக்கு கொஞ்சம் நானும் துவைக்கிறேன். இல்லாவிட்டால் blogger இலக்கணம் மீறப்படுவிட்டதாகிவிடும். எனக்குத் தெரிந்த சிலவற்றைப் பட்டியலிடுகிறேன்.
1. க்ளைமாக்ஸ் ஐ நெருங்கும் சமயம், வில்லன் ஹீரோயினைத் துரத்திக் கொண்டிருப்பான். இருபது வயலின்கள் பின்னணியில் ஆர்ப்பரிக்க ஜீவமரணப் போராட்டத்தில் ஹீரோயின் ஓடிக்கொண்டிருப்பாள்.இருவரும் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு கட்டத்தில் ஹீரோயின் வில்லனின் பின்னால் தூணுக்குப் பின்பாக மறைந்திருப்பாள். வில்லன் அவளைக் காணாமல் தேடிக் கொண்டிருப்பான். ஒரு கட்டை ஹீரோயின் கண்ணில் படும், அந்தக் கட்டையை எடுத்து சத்தம் போடாமல், பதுங்கி வந்து வில்லன் மண்டையில் அடித்தால் தப்பித்து விடலாம்,
1. க்ளைமாக்ஸ் ஐ நெருங்கும் சமயம், வில்லன் ஹீரோயினைத் துரத்திக் கொண்டிருப்பான். இருபது வயலின்கள் பின்னணியில் ஆர்ப்பரிக்க ஜீவமரணப் போராட்டத்தில் ஹீரோயின் ஓடிக்கொண்டிருப்பாள்.இருவரும் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு கட்டத்தில் ஹீரோயின் வில்லனின் பின்னால் தூணுக்குப் பின்பாக மறைந்திருப்பாள். வில்லன் அவளைக் காணாமல் தேடிக் கொண்டிருப்பான். ஒரு கட்டை ஹீரோயின் கண்ணில் படும், அந்தக் கட்டையை எடுத்து சத்தம் போடாமல், பதுங்கி வந்து வில்லன் மண்டையில் அடித்தால் தப்பித்து விடலாம்,
Labels:
சினிமா
Saturday, September 19, 2009
கேட்கப்படாத ஒரு புள்ள பூச்சியின் குரல் (நியாயம்).!
கல்லூரியில் நான்கு வருடங்களும் நான் விடுதியிலேயே தங்கிப் படித்தேன். கடைசி வருடம் மட்டும் நான் வெளியில் அறை எடுத்து தங்குகிறேன் என்று சொன்னதற்கு வீட்டில் மறுத்து விட்டார்கள். கெட்டுப் போய் விடுவேனாம்.நானெல்லாம் " நீ ஊதவே வேணாம் பெருசு" கேஸ் என்பது தெரியாதல்லவா?. வேறு வழியின்றி நான் விடுதியிலேயே தங்க வேண்டியதாயிற்று.
விடுதி எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்களையும் சில கசப்பான அனுபவங்களையும் அளித்திருக்கிறது. பொதுவாக வகுப்பில் ஒரு மூலையில் உக்கார்ந்து "அண்ணே எனக்கு எது புடிக்கலியோ தூங்கிடுவேன்..!" என்று செந்தில் பாணியில் உறங்குபவன் நான்.நான்கு வருடங்களில் வெகு சில பேராசிரியர்கள் தவிர என் பெயர் யாருக்கும் தெரியாது. நாம யாரு வம்புக்கும் போறதில்ல யாரு தும்புக்கும் போறதில்ல.. நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கோம் என்று வடிவேலு பம்மும் விதமாக பம்மிக்கொண்டே வகுப்பிற்கு சென்று வந்து கொண்டிருந்தேன். இரண்டு ஆண்டுகள் இவ்வாறு பிரச்சனை இன்றி கழிந்தது.பரீட்சை நேரங்களில் கூட்டாக சேர்ந்து படிப்பது, அலாரம் வைத்து நள்ளிரவில் எழுந்து படிப்பது என்று இனிய விதமாக நாட்கள் சென்று கொண்டிருந்தன.மூன்றாம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பித்தது சனிதிசை எனக்கு.
விடுதி எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்களையும் சில கசப்பான அனுபவங்களையும் அளித்திருக்கிறது. பொதுவாக வகுப்பில் ஒரு மூலையில் உக்கார்ந்து "அண்ணே எனக்கு எது புடிக்கலியோ தூங்கிடுவேன்..!" என்று செந்தில் பாணியில் உறங்குபவன் நான்.நான்கு வருடங்களில் வெகு சில பேராசிரியர்கள் தவிர என் பெயர் யாருக்கும் தெரியாது. நாம யாரு வம்புக்கும் போறதில்ல யாரு தும்புக்கும் போறதில்ல.. நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கோம் என்று வடிவேலு பம்மும் விதமாக பம்மிக்கொண்டே வகுப்பிற்கு சென்று வந்து கொண்டிருந்தேன். இரண்டு ஆண்டுகள் இவ்வாறு பிரச்சனை இன்றி கழிந்தது.பரீட்சை நேரங்களில் கூட்டாக சேர்ந்து படிப்பது, அலாரம் வைத்து நள்ளிரவில் எழுந்து படிப்பது என்று இனிய விதமாக நாட்கள் சென்று கொண்டிருந்தன.மூன்றாம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பித்தது சனிதிசை எனக்கு.
Labels:
கல்லூரி நாட்கள்
Thursday, September 10, 2009
கவிதை எனப்படுவது யாதெனில்..!
கவிதை எனப்படுவது யாதெனில் வரிவரியா
யெழுதப் படுமுரை நடையாம் .
ரீமிக்ஸ் குறள் நன்றாக இருக்கிறதா? இல்லாவிட்டால் காறி துப்பவும் :-)...
கவிதை எழுவது ஒரு நுட்பமான விஷயம். எல்லோராலேயும் அது முடியாது. "ஒரு ஸ்வீட் ஸ்டாலே" ஒண்ணுக்குக் கீழ ஒண்ணு.. அதானப்பா கவித... "பணியாரம் சாப்பிடுகிறதே" அடடே... ஆச்சரியக்குறி ... என்பதல்ல கவிதை.
யெழுதப் படுமுரை நடையாம் .
ரீமிக்ஸ் குறள் நன்றாக இருக்கிறதா? இல்லாவிட்டால் காறி துப்பவும் :-)...
கவிதை எழுவது ஒரு நுட்பமான விஷயம். எல்லோராலேயும் அது முடியாது. "ஒரு ஸ்வீட் ஸ்டாலே" ஒண்ணுக்குக் கீழ ஒண்ணு.. அதானப்பா கவித... "பணியாரம் சாப்பிடுகிறதே" அடடே... ஆச்சரியக்குறி ... என்பதல்ல கவிதை.
Labels:
பொது
Subscribe to:
Posts (Atom)